உக்ரைன் மீதான ரசியப் போரில் புட்டின் மீது போர்க்குற்ற விசாரணைக்கான பிடிவிறாந்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அறிவித்தபோது அது “நீதியான தீர்ப்பு” என வரவேற்ற அமெரிக்கா, இப்போ நெத்தன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கலன்ற் இருவருக்கும் எதிரான போர்க்குற்ற விசாரணைக்காக அதே நீதிமன்றம் பிடிவிறாந்தை அறிவித்தபோது அந்தத் தீர்ப்பை “அநீதியானது, ஏற்றுக்கொள்ள முடியாதது” என அறிவிக்கிறது. இவர்களோடு சேர்த்து மூன்று ஹமாஸ் தலைவர்களுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து அறிவித்துள்ளது.
Continue reading “பாதங்களை வைக்குமா?”Month: May 2024
எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?
ஹவார்ட் !
எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?
24.05.24 அன்று ஹவார்ட் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ஸ்ருதி குமார் ஆற்றிய உரை பலரையும் கட்டிப் போட்டது. மிகத் தெளிவாக தனது உரையை, தான் கொணர்ந்த குறிப்புக்கு வெளியேயும் போய் முன்வைத்தார்.
Continue reading “எங்கள் குரல் கேட்கிறதா உனக்கு?”பறத்தலும் ஊர்தலும்
வீட்டு பல்கனியை எட்டிப்பார்க்கும் மரக்கிளையில் சிட்டுக் குருவிகளுக்கான தீனை ஒரு சிறு மரவீடு செய்து அதற்குள் இடுவது எனது வழமையாக இருந்தது. பனிப்பொழிவில் அது உணவுதேடி அந்தரப்படுவதை காண சகிக்கவில்லை. அதிலிருந்து அந்த சிறுவீட்டில் தீன்தானம் தொடங்கியது. படபடக்கும் சிற்றிறகையும் அதன் சிறு அலகின் இசையசைவையும் எனது ரசிகன் பார்த்துக்கொண்டு இருப்பான். இப்படியே ஒரு வெயில்கால பருவத்திலும் நான் தொடர்ந்து செய்ததைக் கண்ட அயலவன் “இப் பருவ காலத்தில் பறவைகள் சுயமாக உணவுதேடக்கூடியன. அதற்கான அதனது உழைப்பை இல்லாமலாக்கி சோம்பேறிகளாக்கிவிடாதே” என சொன்னான். உறைத்தது. இயற்கை மீதான இன்னொரு புரிதலாக அது இருந்தது. ஒரு வாழ்க்கைப் பாடமாகவும் இருந்தது.
Continue reading “பறத்தலும் ஊர்தலும்”ஆதரிப்போம் !
கண்முன்னே நடக்கும் காஸா இனப்படுகொலையை நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தாலோ, ஐநா வினாலோ தடுத்து நிறுத்த முடியாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. மேலாதிக்க நலனையும் நயவஞ்சகத்தையும் உள்நிறுத்தி அரசியல்வாதிகளும் அரசும் பேசும் ஜனநாயகம் வார்த்தை ஜாலங்களாக தொடர்கின்றன. மக்கள் வீதிக்கு இறங்கி பெரும் ஊர்வலங்களை நடத்தியும் பார்த்தார்கள். எல்லா இயலாமைகளும் கடைசியில் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்ட நிலைதான் இன்றைய காட்சிகள்.
Continue reading “ஆதரிப்போம் !”

