ஏடன் வளைகுடாவும் மத்திய கிழக்கின் செங்கடல் பகுதியும் இணையும் எல்லை 32 கி.மீ அகலத்தைக் கொண்ட மிக ஒடுங்கிய பகுதியாக அமைந்தள்ளது. இது சுயஸ் கால்வாய்க்கு செல்லும் பாதையும் ஆகும். இந்த ஒடுங்கிய முனைவாயிலை யேமன் நாடு முத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பாதைவழி உலக உணவுத் தேவையின் 60 வீதம் கப்பல் போக்குவரத்தினூடாக நடைபெறுகிறது. அதைவிட மூன்றில் இரண்டு பங்கு எரிபொருள் கொள்ளளவை தாங்கிச் செல்லும் கப்பல்களும் இதனூடாகவே பயணிக்க வேண்டியிருக்கிறது. அத்தோடு ஆசியாவையும ஐரோப்பாவையும் இணைக்கும் கடல்வழிப் போக்குவரத்து இதனூடாகவே நடைபெறுகிறது. இந்தக் காரணங்களால் உலகப் பொருளாதாரத்தின் இரத்தோட்டமாக இந்த கடல்வழி அமைந்திருக்கிறது என விபரிக்கப்படுகிறது.
Continue reading “செங்கடல் தீ”