மேற்குலகின் அளவுகோல்கள் வசதிக்கேற்ப வளைந்து கொடுக்கும் ஒன்று என்பது தொடர் வரலாறாக உள்ளது. 1948 இல் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கமே ஆயிரக் கணக்கான பலஸ்தீன மக்களை கொலைசெய்தும் ஏழு இலட்சம் பேரை அகதிகளாக்கியும் 500 பலஸ்தீன கிராமங்களை அழித்து நில ஆக்கிரமிப்பு செய்ததும் என ஒரு வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றை நாக்பா என பலஸ்தீன மக்கள் கவலையுடன் நினைவுகூர மறுபுறம் இஸ்ரேல் தேசியதினமாக கொண்டாடும் வரலாறு அது. அதன்பின்னாக காலத்துக்குக் காலம் பல பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் படிப்படியாக பலஸ்தீனத்தின் பெருநிலப்பரப்பை இஸ்ரேல் விழுங்கிக் கொண்டது. ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைகளிலும் பல பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆகியும் தமது நிலத்தையும் வாழ்விடங்களையும் இழந்துகொண்டது வரலாறு.
Continue reading “வழித்தடம்”