காஸாவின் குழந்தைகள் தமது உள்ளங்கைகளில் பெயரையும் முகவரியையும் வர்ணம் கலந்த பேனா மையினால் எழுதி வைக்கிறார்கள். தாம் இறந்தபின் சிதறுண்ட தமது உடலை வேண்டியவர்கள் அடையாளம் காண அப்படிச் செய்கிறார்கள். கசங்கிய கடதாசியில் பிஞ்சுக் கைகளால் ‘உயில்’ எழுதி வைக்கிறார்கள். தமது விளையாட்டுப் பொருட்களை யார்யாருக்கு கொடுக்க வேண்டும். தமது உடைகளை யார்யாருக்குக் கொடுக்க வேண்டும். தாம் குருவிபோல் சேகரித்த உண்டியல் காசை யார்யாருக்கு எவ்வளவு எவ்வளவாய் பிரித்துக் கொடுக்க வேண்டும். எழுதுகிறார்கள். தமது அம்மா அப்பா தம்பி அண்ணன் தங்கை அக்கா என குறிப்பிட்டு அவர்கள் எழுதும் இந்த உயிலை வாசிக்கக்கூட அவர்களது இந்த உறவுகள் உயிர்பிழைப்பார்களா தெரியாது. என்ன கொடுமை இது.
Continue reading “இருந்தும் விடுகிறோம்!”