நாவல்
சுவீடன் எழுத்தாளர் Pär Lagerkvist அவர்களினால் 1950 இல் எழுதப்பட்ட இந் நாவல் 1951 இல் நோபல் பரிசை பெற்றது. பௌதீக யதார்த்த வாழ்வுக்கும், நம்பிக்கைகளை உருவாக்கி போற்றும், அல்லது அதற்கு கட்டுப்பட்டு வாழும், வாழ்வுக்கும் இடையே நகருகிறது இந் நாவல். குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு ஜெரூசலத்திலுள்ள கொல்கொத்தா மலையில் மூவர் சிலுவையில் அறையப்படுவதற்காக தொங்கவிடப்படுகிறார்கள். அவர்களில் ஒருவன் பாரபாஸ். பெற்றோராலும் சமூகத்தாலும் கைவிடப்பட்டவன். ஓர் அநாதை. பழிபாவம் எதற்கும் அஞ்சாதவன். கொள்ளைக்காரன். பாரபாஸ் இன் அலைவு கொல்கொத்தா, ஜெரூசலம், சைப்பிரஸ் என பயணித்து இறுதியில் றோம் இல் சிலுவையில் ஏற்றப்பட்டு மரணிக்கிறது.
