ஒரு பார்வை
அண்மைக் காலமாக தமிழில் புலம்பெயர் இலக்கியம் குறித்த கேள்விகள் வரைவுகள் அதிகம் பேசப்படுவனவாக மாறியுள்ளன. தமிழகத்தில் முதலில் அதாவது 90 களின் முற்பகுதியில் புலம்பெயர் இலக்கியத்தை அறிமுகமாக்கிய வரலாற்றுத் தொடக்கம் நிறப்பிரிகை குழுவுக்கே உள்ளது என நினைக்கிறேன். 1996 இல் பாண்டிச் சேரியில் ஒரு சந்திப்பில் புலம்பெயர் இலக்கியம் என்பது புலம்பெயர்ந்த தமிழக மக்களை உள்ளடக்காதா என ரவிக்குமார் கேட்டிருந்தார். அது இப்போ பலரும் எழுப்புகிற கேள்வியாகியிருக்கிறது புலம்பல் இலக்கியம் என தமிழக எழுத்தாளர்கள் சிலராலும் ஈழத்து எழுத்தாளர்கள் சிலராலும் அப்போ எள்ளிநகையாடப்பட்ட காலகட்டம் அது. இன்று அது பேசப்படும் பொருளாக மாறியிருக்கிறது. அண்மைக் காலமாக அதன் வரையறைகளை கேள்விக்கு உள்ளாக்குகிற, எல்லைகளை விசாலிக்கிற கருத்துக்கள் மேலெழுந்திருப்பது வரவேற்கக் கூடியதுதான். மாறாக அதை ஒரு சர்ச்சையாகப் பார்க்க வேண்டியதில்லை. இதில் என் தரப்பிலான கருத்தை இங்கு முன்வைக்கிறேன். அவ்வளவுதான்.
Continue reading “புலம்பெயர் இலக்கியம்”