ஒருமுறை வேலைநிமிர்த்தம் இங்கு (சுவிஸ்) வந்த பெங்களூர் நண்பர் ஒருவர் தமிழீழத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவித்துவிட்டிருந்தால் இப்பிடியெல்லாம் நடந்திருக்குமா..“ என அங்கலாய்த்தார். அவரிடம் நான் சொன்ன பதில், “அப்பிடியொரு நிலை வந்தால் இந்திய மாநிலமாக இருப்பதைவிட நாங்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்வதற்காக போராட வேண்டி ஏற்படும்.“ என.
Continue reading “கூச்சல்”
Day: July 24, 2019
யூலைக்கால நினைவுக் குறிப்பு
1983 யூலை கடைசிப் பகுதி. இரத்மலானை விமான நிலையம் அகதிமுகாமாக உருமாறியிருந்தது. ஆயிரக்கணக்கான அகதிகள். குழந்தைமையிலிருந்து கிழம்வரை பருவமுற்றிருந்தனர் அவர்கள். நாம் 55 பேரும் ஓரிடத்தில் குழவாகியிருந்தோம். படுக்கை, இருப்பு எல்லாம் அந்த இடத்துண்டை எமது பிரதேசமாக ஆக்கியிருந்தது. அனைவரும் மொரட்டுவ பல்கலைக் கழகத்திலிருந்து பத்திரமாக கொண்டுவரப்பட்டிருந்தோம். எம்மாலான உதவிப் பணிகளில் நாம் அநேகமாக ஓய்வற்றிருந்தோம். ஒரு கண்டத்தை கடந்து வந்ததான நினைப்பு எல்லாக் களைப்பையும் வெற்றிகொண்டது.