// ” பெட்டை நாயே! இங்கே நடப்பது ஒன்றுமேயில்லை. உன்னை உகண்டாவுக்குக் கொண்டுபோனபின்தான் கச்சேரியே இருக்கிறது” என்று அவர்கள் கொக்கரித்தார்கள்.அவர்கள் அந்த இரகசிய இடத்தில் என்னை நீண்ட நாட்களாக அடைத்துவைத்து சொல்லவோ எழுதவோ முடியாத சித்திரவதைகளை செய்தார்கள்.அந்தக் காலம் என் அவமானத்தின் காலமாக இருந்தது. அதைப் பற்றி இதற்குமேல் எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை…