அரசியல் மயப்படுத்தப்படுவதைப் பற்றி பேசும்போது அரசியல்மயப்படல் என்பதை ஓரங்கட்டாமல் இருப்பது முக்கியமானது. வாழ்நிலை உணர்வுகளைத் தீர்மானிக்கிறது என்பதை அரசியல்வெளிக்கு அப்பால் வைத்து வரைவுசெய்ய முடியாது. இந்த 30 வருட யுத்தம் உருவாக்கிய புறச்சூழல் மக்களிடம் உண்டாக்கிய உணர்வலைகள் என்ன? தமது இருத்தலை பாதிக்கும் விசயங்களில் அதிகாரத்துக்கு எதிராக மக்கள் இயன்றளவு காட்டிவரும் எதிர்ப்பு அரசியல்மயப்படலன்றி வேறென்ன?