பாடசாலை முடிந்து பிள்ளை பரீட்சை பெறுபேறுடன் வீட்டுக்கு வருகிறது. அது தன்னளவில் திருப்பதியடைந்தோ அல்லது திருப்திப்படாமலோ வருகிறது. அதைவிட அக் குழந்தையிடம் தனது பெற்றோரின் அலசல் முறையில் பயம் மேலிடுகிறது. பக்கத்துவீட்டு சக மாணவர்களின் புள்ளிகளை விசாரித்து தனது குழந்தையின் திறமை அல்லது திறமையின்மைமீது தீர்ப்பு வழங்கும் மனோபாவம்தான் அது.