எந்த “மாற்று” இது?

அரசு(கள்) என்பதே ஒரு வன்முறை இயந்திரம். அதன் விளைபொருளாக எதிர்ப் பயங்கரவாதம் உருவாகுவது ஒன்றும் அதிசயமல்ல. இலங்கையில் புலிகளின் ஆயுதப் போராட்டம் ஒரு பகுதியினரால் தமிழ்மக்களுக்கான போராட்டமாகவும் இன்னொரு பகுதியினரால் பயங்கரவாதமாகவும் வரைவுசெய்யப்பட்டது. எது எப்படியோ புலிகளின் அழிவு (ஆயுதரீதியிலான இயங்குதளம்) முற்றாக 2009 உடன் முடிந்துபோயிருக்கிறது. தமிழ் மக்களுக்கான தீர்வை கொடுத்துவிட புலிகளே தடையாக இருக்கின்றனர் என்ற அரசின் அல்லது அரச ஆதரவாளர்களின் வாதத்தை இந்த 3 ஆண்டுகள் பரிட்சைக்காலமாக எடுத்துக்கொண்டால் பெறுபேறுகள் என்னவாக இருக்கிறது? கடைசியில் நடந்துள்ள வைத்தியர் சங்கரின் கைது பற்றிய செய்தி இன்னமும் உலரவில்லை.

Continue reading “எந்த “மாற்று” இது?”