போர்ப் பறப்பு

என் இரவுகளைக் கொத்தி
துளைகளிடும் பறவைகளின் ஒலி
தூக்கத்தைக் கலைக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர்
சமாதானத்துக்கான போர்
சனநாயகத்துக்கான போர் என்றெல்லாம்
நிறம் விரித்து வருகிறது பறவைகள்
அவ்வப்போது.

Continue reading “போர்ப் பறப்பு”

உதிர்கவிதைகள்

1. நிறவெறி நான் கையைக் கழுவுகிறபோது

நீரில் கலைந்த அழுக்குளைப் பார்த்து

உன் நிறம் கரைகிறது என்று சொல்லிச்

சிரித்தான் சகதொழிலாளி.

அவனது வெள்ளைத்தோலில் அப்பிக்கொண்டிருந்தது

நிறவெறி.

Continue reading “உதிர்கவிதைகள்”