என் இரவுகளைக் கொத்தி
துளைகளிடும் பறவைகளின் ஒலி
தூக்கத்தைக் கலைக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர்
சமாதானத்துக்கான போர்
சனநாயகத்துக்கான போர் என்றெல்லாம்
நிறம் விரித்து வருகிறது பறவைகள்
அவ்வப்போது.
Day: May 12, 2008
உதிர்கவிதைகள்
| 1. நிறவெறி நான் கையைக் கழுவுகிறபோது
நீரில் கலைந்த அழுக்குளைப் பார்த்து உன் நிறம் கரைகிறது என்று சொல்லிச் சிரித்தான் சகதொழிலாளி. அவனது வெள்ளைத்தோலில் அப்பிக்கொண்டிருந்தது நிறவெறி. |