போர் பூத்த நாகரிகம்

பலஸ்தீனத்தைக் குதறுகிறது
ஏவல் நாயொன்று
றமெல்லாவின் இடிபாடுகளுள் அது
மோந்து திரிகிறது -தன் சொல்ப்
‘பயங்கரவாதிகளை’.
காட்சிகளில் லயித்துப்போய்
அமர்ந்திருக்கிறான் அதன்
எஜமானன்.
புல்டோசர்கள் கட்டடங்களை
நிதானமாகத் தகர்க்கின்றன
இடிபாடுகளை நிர்மாணிக்கின்றன

Continue reading “போர் பூத்த நாகரிகம்”

துவாரகனின் வெளிகள்

“மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்”

கவிதைத் தொகுதி முகவுரை

‘இந்தத் தேசத்தின் ஆத்மா
துடித்துக்கொண்டிருக்கிறது’ -துவாரகன்

இதுவாய்ப்போன இந்தத் தேசத்தை ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’என எழுதிச் செல்லும் கவிதைத் தொகுதி இது.

இந்த மூச்சுவெளிகளை உருவாக்கிய போர் மரணத்தை உமிழ்கிறது. அது எப்படிப்பட்டது?

Continue reading “துவாரகனின் வெளிகள்”