பலஸ்தீனத்தைக் குதறுகிறது
ஏவல் நாயொன்று
றமெல்லாவின் இடிபாடுகளுள் அது
மோந்து திரிகிறது -தன் சொல்ப்
‘பயங்கரவாதிகளை’.
காட்சிகளில் லயித்துப்போய்
அமர்ந்திருக்கிறான் அதன்
எஜமானன்.
புல்டோசர்கள் கட்டடங்களை
நிதானமாகத் தகர்க்கின்றன
இடிபாடுகளை நிர்மாணிக்கின்றன
Day: May 11, 2008
துவாரகனின் வெளிகள்
“மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்”
கவிதைத் தொகுதி முகவுரை
‘இந்தத் தேசத்தின் ஆத்மா
துடித்துக்கொண்டிருக்கிறது’ -துவாரகன்
இதுவாய்ப்போன இந்தத் தேசத்தை ‘மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்’என எழுதிச் செல்லும் கவிதைத் தொகுதி இது.
இந்த மூச்சுவெளிகளை உருவாக்கிய போர் மரணத்தை உமிழ்கிறது. அது எப்படிப்பட்டது?