– ஓர் அறிமுகக் குறிப்பு
நதிகள் கல்லானதை
பறவைகள் அழுததை
அடர்ந்த காடுகள் சிறகசைத்துப் பறந்ததை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
முன்னைய கடவுள்கள் புதையுண்டதையும்
புதிய கடவுள்கள்
இருண்ட இரவில் ஆகாயத்திலிருந்து
உடல் நிர்வாணமாகவும்
உடல் கவசங்களோடும்
கடும் கோபமாகவும்
கடும் மகிழ்ச்சியாகவும்
இறங்கியதை
நீ உனது கண்களால் கண்டதுண்டா?
அல்லது யாரும் சொல்லிக் கேட்டதுண்டா?
…..