Archive for the ‘விமர்சனம்’ Category
- In: அறிமுகம் | இதழியல் | முகநூல் குறிப்பு | விமர்சனம்
- Leave a Comment
பரதன் நவரத்தினம் – பாரதி சிவராஜா – மீராபாரதி – புதியவன் – தேவன் – மாலினி – புதியமாதவி – அரியநாச்சி – டேவிட் கிருஸ்ணன் – அம்பை – சண் நரேந்திரன் – கௌதம சித்தார்த்தன் – சந்திரா நல்லையா – தேவா – கருணாகரன் – அசுரா நாதன் – சிவச்சந்திரன் சிவஞானம் – பா.செயப்பிரகாசம் – யசோதா பத்மநாதன் – வாசன் – சுரேகா – நிரோஜன் சதாசிவம் – இராகவன் (இலங்கை) – க.பத்திநாதன் – குமணன் – நிலாந்தி – ஜெகநாதன் சற்குரு – எஸ்.கே.விக்னேஸ்வரன் – அகரன் பூமிநேசன் – பரமநாதன் தவநாதன்– முகுந்தன் குணரட்ணம் – சுசீந்திரன் நடராஜா – கருணாகரமூர்த்தி – எம்.கே.முருகானந்தன் – சரவணன் மாணிக்கவாசகம்
Read the rest of this entry »- In: அறிமுகம் | இதழியல் | விமர்சனம்
- Leave a Comment
வெற்றிகொள்ள முடியாதா என்ன!
Posted July 11, 2020
on:- In: பதிவு | விமர்சனம்
- 2 Comments
முகநூலில் நடந்த சாதிய கதையாடல்களை முன்வைத்து…
பகுதி-1
இந்த உலகம் ஓர் இனவாத உலகம். இனவாதம் தொன்றுதொட்டு வெவ்வேறு வடிவங்களில் நிலவிவருகிறது. ஜோர்ஜ் புளொய்ட் கொலை நிறவெறி வடிவிலான அமெரிக்க இனவாதத்தினதும், மறுதலையாக அந்த இனவாதத்துக்கு எதிரான மக்கள் மனநிலையினதும் ஓர் குறியீடு. அது அதிர்வலையை மட்டுமல்ல, பல கேள்விகளையும் எமது சிந்தனையில் எழுப்பியிருக்கிறது. அடிமை வாழ்வின் இழிவுபடுத்தல்களோடும், தனித்துவமான ஆபிரிக்கப் பண்பாடுகளின் அழிப்புகளோடும், வெள்ளை மேலாதிக்கத்தோடும் இயங்கிய இனவாத காலகட்டமானது கறுப்பின மக்களை மனிதப்பிறவிபோல நடத்தாத ஓர் வரலாற்று குரூரம் வாய்ந்தது. இந்த மனநிலையுடன் கறுப்பின மக்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு அமெரிக்காவினுள் கொண்டுவரப்பட்டார்கள். சுமார் நூற்றியைம்பது வருடங்களின் முன்னர் மிகமிகச் சிறிதான வெள்ளையர்கள் மட்டுமே -அதுவும் குறிப்பாக கத்தோலிக்க மதத்தை தமது ஆத்மாவில் ஏற்றுக்கொண்ட வெள்ளையர்களே- மனிதாபிமான அடிப்படையில் அடிமை முறைமையை தமது வலுவுக்குள் நின்று எதிர்த்தார்கள். கறுப்பின அடிமை வாழ்விலிருந்து உதிரிகளாக தப்பியோடிய கறுப்பின மக்களை கனடாவுக்குள் எல்லை கடந்து செல்ல உதவினார்கள். பொதுப்புத்தி என்பது முற்றாகவே வெள்ளை மேலாதிக்க கருத்தியலோடும் கற்பிதங்களோடும் வெள்ளையின சமூகத்தை இயக்கியது.
அழிந்து போகுமா?
Posted February 10, 2020
on:பகடிவதையின் வேர்கள் குடும்பம், பாடசாலை போன்ற சமூகநிறுவனங்களில் பரந்து விரிந்திருக்கிறது. குடும்பத்துக்குள்ளோ பாடசாலையிலோ உறவு முறை அதிகாரம் சார்ந்தே செயற்படுகிறது. பெற்றோருடன் ஒரு பிள்ளை சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. பாடசாலையில் ஆசிரியருடன் சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. தமது கருத்துகளை அச்சமின்றி முன்வைக்க முடிவதில்லை. அவர்களது ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்படுவதுமில்லை. இந்த நிறுவனங்களுள் கல்வி சார்ந்த அடக்குமுறையும் அழுத்தமும் (பாடசாலையாலும் குடும்பத்தாலும்) இணைந்தே செயற்படுத்தப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரன்கூட “போய்ப் படியடா” என்று பிடரியில் தட்டுகிற உரிமையைக் கொண்டுள்ளான் என்பது எவளவு துயரமானது.
இச்சா
Posted December 1, 2019
on:- In: அறிமுகம் | இதழியல் | விமர்சனம்
- Leave a Comment
நாவலின் முடிவும் தொடக்கமும் ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு ஆலாவின் வாழ்வை வட்டமாக, நாவலின் வடிவமாக வரைகிறது. இந்த வட்டத்துள் ஆலாவின் வாழ்வு சிக்கிச் சுழல்கிறது. நூலாசிரியரின் மொழியாளுமையும் படிமங்களும் வாசகரை இந்த வட்டச் சுழியுள் உள்ளிழுத்துவிடுகிறது. இந்தப் போரானது எப்படி ஒரு விளம்புநிலை மனிதரை வந்தடைகிறது என்பதையும், அது அந்த மனிதர் சார்ந்து மற்றவர்களையும் உள்ளிழுத்து துன்பப்படுத்துகிறது என்பதையும் நாவல் பேசுகிறது.
நினைவழியா வடுக்கள்
Posted October 20, 2019
on:சிவா சின்னப்பொடி அவர்களின் நூல்
சமூக ஒடுக்குமுறைகளான சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை, நிறவெறி என்பன குறித்தான குரல்களுக்கு ஓய்வு இல்லாமலிருப்பதானது அவற்றின் ஒடுக்குமுறையை பிரதிபலித்துக் காட்டுவதான ஒன்று. எனவே இவைகளைப் பற்றி பேசுவதை எதிர்ப்பது அல்லது இதை பேசுவதால்தான் அவை வாழ்கிறது என வைக்கப்படுகிற பொதுப்புத்தி கதையாடல்கள் அர்த்தமற்றது. அனுபவத்தை தமிழில் பட்டறிவு என்ற சொல்லால் சுட்டுவர். எமது அறிவுத்தளம் விரிவடைய வேண்டுமானால் அனுபவங்களை கேட்பதும் கிரகிப்பதும், அதை தர்க்க விஞ்ஞானத்துக்கும் கோட்பாட்டு ஆய்வுக்கும் உட்படுத்தி புரிந்துகொள்வதும் பயனுடையது.
ஈழப்போராட்டம்
Posted August 25, 2019
on:ரகுமான் ஜானின் தொகுப்புகள் குறித்து..
கடந்த 18.08.2019 அன்று சூரிச் இல் ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல், அமைப்புத்துறை, மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய பிரச்சினைகளை உள்ளடக்கி மூன்று பகுதிகளாக வந்திருக்கும் -ஜான் மாஸ்ரர் தொகுத்தளித்துள்ள- நூல் பற்றிய அறிமுகம் நடந்தது. அதில் நான் வழங்கிய அறிமுகவுரையை பதிவாக்குகிறேன்.
சுவிஸ் – வரலாற்றின் பொத்தல்கள்.
Posted August 23, 2019
on:There is no short-cut to the revision of a country’s history – Hans Fässler
“சுவிற்சர்லாந்து காலனியாதிக்கத்தில் பங்கேற்காத நாடு அடிமைகளை கொள்ளாத நாடு” என்று சொல்லப்படுகிறது. அது நேரடியாக கொலனிகளை வைத்திருக்காததால் அப்படி ஒரு தோற்றப்பாடு உள்ளது. இதற்கு மாறாக திரைமறைவில் இருந்த விவகாரம் அல்லது உண்மை சுவிசில் படிப்படியாக பேசப்படுகிற பொருளாக மாறியுள்ளது.
மணல் யுத்தம் (Sand war)
Posted July 28, 2019
on:- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
இந்த பத்தியை கணனியில் நான் எழுதிக்கொள்ள பாவிக்கும் ‘எழுத்தடங்கி’ (keyboard) மட்டுமல்ல, கணனித் திரை… ஏன் கணனியின் உடலழகுகூட மணல் இன்றி உருவாகியிருக்க சாத்தியமில்லை. பாவிக்கும் கைபேசிகள், தொலைக்காட்சிகள், அதன் சிம் கார்ட்டுகள், சிப்ஸ்கள் மட்டுமல்ல, பற்பசை மற்றும் அழகுசாதனங்கள்கூட மணலின்றி சாத்தியமில்லை. அந்தளவுக்கு வாழ்வோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது மணல்.
இருந்தும் நம்மில் பலராலும் கண்டுகொள்ளப்படாமல் நடக்கும் யுத்தம் மணல் யுத்தம் (sand war).
“ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்”
Posted July 12, 2019
on:- In: இதழியல் | விமர்சனம்
- Leave a Comment
ஐயர் (கணேசன்) இன் நூல்
– தாமதமான வாசிப்பு
1985 ஆரம்பகாலப் பகுதி. கருக்கல் பொழுது. எமது ஊர் அதிகாலை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. செய்தி ஒரு உட்புயலாக ஊருக்குள் வேகமாக பரவுகிறது. முதலில் வாசிகசாலை மையத்துக்கு ஓடுகிறேன். அங்கு மற்றைய நண்பர்கள் பரபரப்புடன் நிற்கிறார்கள். எல்லோருமாக சுற்றிவளைப்பின் கெடுபிடியை கடப்பு ஒன்றினூடான பதுங்கிக் கடந்து அயல் ஊருக்குள் ஓடிக்கொண்டிருந்தோம். பயிற்சி எடுத்தவன் எடுக்காதவன் ஆதரவாளன் என அந்த இளைஞர் குழாம் பல இயக்க வாடையை காவியபடி பறந்துகொண்டிருந்தது. கையில் ஒரு பிஸ்ரலுடன் ரெலோ இயக்க போராளி ஒருவன் எம்முடன் ஓடிக்கொண்டிருந்தான். “என்னடாப்பா நாமதான் ஆயுதமில்லாமல் ஓடுறமெண்டால் நீ ஆயுதத்தோடை ஓடுறாய்” என கடித்தேன் நான். அவன் சிரித்தபடியும் ஓடிக்கொண்டும் சொன்னான் “ இந்த ஜே.ஆர் க்கு பகிடி வெற்றி தெரியாது. சும்மா பேச்சுக்கு தமிழீழம் எண்டு கேட்டால் அதுக்கு இப்பிடியே கலைக்கிறது என்றான். எனக்கு என்னவோ இன்றுவரை இதற்குள் சிந்தனையை கிளறுகிற ஒரு அரசியல் இழை பின்னியிருப்பதாகவே படுகிறது.