ஹிப்பி

1970 களில் எமது விடலைப் பருவத்தில் ஹிப்பி பற்றிய செய்திகளை வாசித்தும் கேட்டும் அறிந்தேன். அவர்களை சடை வளர்ந்த தலையுடன், கசங்கிய உடையுடன், வாழ்க்கை வெறுத்த மனிதர்களாக, போதைப் பொருள் பிரியர்களாக வெள்ளைநிறத்துடன் ஒரு தோற்றத்தை வரைந்துகொண்டேன். பின் யாழ் நகரில் அந்த மனவரைவுத் தோற்றத்தில் ஒருசிலரை அப்படி பார்த்தேன். அவர்கள் ஹிப்பிதானா இல்லையா என எனக்கு இப்போதும் தெரியாது. 80 களின் ஆரம்பத்தில் கொழும்பில் பார்த்த உருவம் எனது மனவரைவை தோற்றத்தில் மட்டும் செழுமைப்படுத்தியிருந்தது. பின்னரான காலத்தில்தான் அவர்களின் எதிர்க் கலாச்சார எழுச்சி பற்றி அறிந்துகொண்டேன்.

Continue reading “ஹிப்பி”

தெரியாமல் போய்ச்சு!

நெடுமாறனின் பிரபாகரன் கதை

  1. இப்போ 2023. இடையில் 14 ஆண்டுகள். தலைவருக்கு இப்போ நரைவிழுந்திருக்கிறது. தாடி வளர்ந்திருக்கிறது. விடுதலைத் தீயை அவர் ஏந்தியிருக்கிறார். வெளியுலகிலிருந்து துண்டித்த கூட்டிலிருந்து முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வருகிறார். சரியான தருணம். அதென்ன சரியான தருணம் என நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். தலைவர் வருவார். திட்டத்தை அறிவிப்பார். தமிழீழம் கிடைக்கும். தமிழீழப் படம். இயக்குநர் யார் என்பதும் நெடுமாறனுக்குத்தான் வெளிச்சம். ஊடகங்களெல்லாம் அரைச்சு அரைச்சு தீவனமாக எமக்கு வழங்குகிறது. நாம் எவளவு பெரிய முட்டாள்கள் என நெடுமாறன், காசி கோஸ்டியும் ஊடகங்களும் நினைத்திருக்கலாம். இருக்கட்டும்.
Continue reading “தெரியாமல் போய்ச்சு!”

புதியதோர் உலகம்

– உள்ளும் புறமும்

புதியதோர் உலகம் நாவலின் முதல் பதிப்பு 1985 இல் தீப்பொறி குழுவினரால் வெளியிடப்பட்டது. பின்னர் இந் நூலை பிரதிகள் செய்து, தானே அதை நூலாகக் கட்டி தோழர் சபாலிங்கம் பாரிஸ் இல் விநியோகித்தார். இதன் இரண்டாவது பதிப்பு 1997 இல் வெளிவந்தது. இதை தீப்பொறிக் குழுத் தோழர்கள் விடியல் பதிப்பகத்தினூடாக வெளியிட்டிருந்தார்கள். (புத்தக வடிவமைப்பை நான் செய்திருந்தேன்). இப்போ மூன்றாவது பதிப்பாக தமிழகத்தின் சிந்தன் புக்ஸ் 2023 இல் வெளியிடுகிறது. 37 வருட காலத்தின் பின்னும் இந்த நூல் மறுபதிப்பாக வருவது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது. இலக்கியத் தளம் என்பதைவிட அரசியல் தளத்தில் அதன் பேசு பொருள் இப்போதும் பொருந்துவனவாக இருப்பதே அதற்குக் காரணம்.

Continue reading “புதியதோர் உலகம்”

தோட்டமும் காடும்

” ஐரோப்பா ஒரு தோட்டம். மற்றவையெல்லாம் காடுகள்”

ஐரோப்பிய ஆணையத்தின் உபதலைவரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கான கொள்கை வகுப்பாளர்களின் உயர் அதிகாரியுமான யோசப் போர்ரல் அவர்கள் இவ்வாறு செப்பியிருக்கிறார். இவர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்.

“ஐரோப்பா என்ற தோட்டத்தை நாம் நிர்மாணித்திருக்கிறோம். எல்லாமே சரியாக தொழிற்பாட்டில் உள்ளது. அரசியல் சுதந்திரம், பொருளாதாரச் செழிப்பு, சமூக ஒருமைப்பாடு என்ற மூன்றும் இணைந்ததாக அது செயற்படுகிறது. இவ்வாறான அற்புதமான செழிப்பான சுதந்திரமான ஐரோப்பா இந்த உலகில் விதிவிலக்கானது.

Continue reading “தோட்டமும் காடும்”

மாற்றங்களின் எதிரிகள் !


Enemies of SYSTEM CHANGE !

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவோ ஐரோப்பிய ஒன்றியமோ தனித்தனியான மேற்குலக நாடுகளோ உதவ முன்வராதது ஏன்?. இந்த பொருளாதார நெருக்கடிக்கு முழுக் காரணமுமே ராஜபக்ச குடும்பம்தான் எனவும் போர்தான் காரணம் எனவும் நிறுவிவிட முடியாது. அவை உள்ளகக் காரணிகள் மட்டும்தான். உலகில் ஏழை நாடுகள் எதுவும் முழு இறைமையோடு இருப்பது சாத்தியமற்றதாக்கப்பட்டு பல காலமாகிவிட்டது. அப்படியானால் இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தை இலங்கைக்குள் மட்டும் எப்படி கண்டுபிடித்துவிட முடியும் ?

Continue reading “மாற்றங்களின் எதிரிகள் !”

மாயை ஆகுமா ?

image: slguardian.org

காலிமுகத்திடல் போராட்டத்தில் ராஜபக்சக்களை அகலுமாறு கேட்டு போராடியது எவரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்காதளவு வெற்றியளித்திருக்கிறது. ஒரு அரண்மனை ஆட்சி வீழ்ந்துகொண்டிருப்பது போல அதை விழிபிதுங்க பார்த்தார்கள் மக்கள். போரை வெற்றிகொண்ட ஒரு மன்னராக கொண்டாடப்பட்ட மகிந்தவின் வரலாறு மகாவம்சத்தில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்றளவுக்கு சென்றிருந்தது. இன்று அந்த மன்னன் குறித்த பிம்பத்தை இந்தப் போராட்டம் தகர்த்ததோடு அவரை ஓடிஒளிந்துகொள்ளவும் வைத்திருக்கிறது. இது மிகப் பெரும் சாதனை. மக்கள் போராட்டத்தின் வலுவை உணர்த்திய சம்பவம்.

Continue reading “மாயை ஆகுமா ?”

காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?

இலங்கையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னால் தீவிரவாதிகளும் புலம்பெயர் தமிழர்களும்தான் இருக்கிறார்கள் என மகிந்த கூறியிருக்கிறார். சிங்கள மக்கள் முன்னிலைப் பாத்திரம் அளித்து தொடங்கிய இந்த எழுச்சியை அவர் இலாவகமாகவே இனவாத அரசியலாக திசைதிருப்புகிறார்.

Continue reading “காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?”

போருற்ற உலகு !

saurce : Reuters, Nato

யுத்தம் வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. யுத்தம் என்பது சண்டை மட்டுமல்ல. பெரும் உயிரழிவுகளையும் அங்கவீனமுறும் மக்கள் கூட்டத்தையும் உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, அது பொருளாதார அழிவுகளை ஏற்படுத்துகிறது. பண்பாடுகளை அதன் விழுமியங்களை மரபுகளை சிதைத்துவிடுகிறது. இயற்கை வளங்களை அழிக்கிறது. இவ்வாறாக ஒரு சமூகத்தை அதன் மரபுத் தொடர்ச்சியிலிருந்து, இயல்பான வளர்ச்சிநிலையிலிருந்து முறித்து முடமாக்குகிறது. எனவே யுத்தத்துக்கு எதிராக நிற்றல் எனபது மிக அடிப்படையானது.

Continue reading “போருற்ற உலகு !”

இயக்கவாத மாவீரர் தினம்!

நவம்பர் 27 மாவீரர் கொண்டாட்ட நாள்!. மனிதர்களின் உயிரை மதித்தல் என்பது மிகப் பெரிய அறம். தன்னலத்தைத் தாண்டி பொதுநலனோடு சிந்தித்தல் என்பது மாற்றங்களுக்கான வித்து. அதை செயற்படுத்த முனைபவர்கள், அதற்காக தமது நலன்களை மட்டுமல்ல தமது உயிரைக்கூட அர்ப்பணிக்க முன்வருபவர்களில் பெரும் பகுதியினர் இயக்கங்களில் இணைந்தார்கள். அவர்களை நாம் கொண்டாடுவது தகும்.

Continue reading “இயக்கவாத மாவீரர் தினம்!”

ஜெய் பீம் – சூழும் அரசியல்!

தமிழ்ச் சமூகத்துள் இன்று அதிர்வை ஏற்படுத்தியுள்ள ஒரு திரைப்படம் ஜெய் பீம் என்பதற்கு எழுந்திருக்கிற சர்ச்சைகள் ஓர் அசல் சாட்சி.
• உண்மை-புனைவு முரண்பாடு
• திரைப்படத்துறையின் பொதுப் போக்கு
• அரசியல் கட்சிகள் நடத்துகிற தேர்தலிய அரசியல்
• இழிவுபடுத்தல்கள்
• புனிதங்கள்
• காலம்-வெளி
என பல காரணிகள் இந்த சர்ச்சைகளை வடிவமைக்கின்றன.

Continue reading “ஜெய் பீம் – சூழும் அரசியல்!”