Vertical Forest

கட்டடக்கலை ஒரு அற்புதமான கலை. பின்நவீனத்துவம் தோன்றிய களமும் அதுதான். இப்போ கட்டடக் கலையில் புதிய சகாப்தமொன்றை Vertical Forest (செங்குத்துக் காடு) நிறுவியிருக்கிறது. செங்குத்து காடு என்றால் என்ன. அதன் கருத்தாக்கம் (concept) என்ன.

Continue reading “Vertical Forest”

பிசாசு

மேற்குலக “புலம்பெயர் தமிழர்கள் வசதியான வாழ்வை வாழ்ந்து கொண்டு…” என ஒரு ஆயுதத்தை புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு அல்லது நெருக்குதலுக்கு சாமான்ய மனிதஜீவியிலிருந்து, (ஒரு பகுதி) புத்திஜீவிகள் வரை தமக்குள் கைமாற்றிக் கொள்கிறார்கள். இதுபற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. இது உண்மையா மாயையா, இதன் அடிப்படை காரணம் என்ன என்பதே அந்த யோசனை.

Continue reading “பிசாசு”

அஞ்சலி !

“o jogo bonito” -PELE

20ம் நூற்றாண்டின் ஒரு மாபெரும் கால்பந்து வீரன் பெலே தனது 82 வயதில் 29.12.2022 காலமாகியிருக்கிறார்.

தனது 21 வருட கால்பந்து வாழ்வில் 1367 உத்தியோகபூர்வ போட்டிகளில் மொத்தம் 1283 தடவை இலக்குகளை (goals) வென்றவன் அவன். இதில் பிரேசில் தேசிய அணிக்கு அவன் பெற்றுக் கொடுத்த 77 இலக்குகள் அடக்கம்.

Continue reading “அஞ்சலி !”

மைக்கேல்

Thx: Betty Images

அவள் பெயர் மரியா. முன்னாள் யூகோஸ்லாவியாவிலிருந்து உதித்த கொராற்சியா நாட்டை சேர்ந்தவள். அவளுக்கு அப்போ 20 வயதாகியிருக்கவில்லை. 200 பேர் வேலைசெய்யும் எமது தொழிற்சாலையின் உற்பத்திப் பகுதியில் அவள் உட்பட ஓரிரு பெண்கள் மட்டுமே வேலைசெய்தனர்.

மரியா வேலைக்கு வந்தபோது விடலைப் பருவம் முற்றாக நீங்கியிருக்கவில்லை. அவள் பெடியனா பெட்டையா என பலருக்கும் குழப்பம் இருந்தது. எனக்கும்தான். அவளது உடை, நடை, தலைமயிரின் நவீன அலங்காரம் எல்லாமும் இந்த குழப்பத்தை தந்தன. அவளுக்கு மார்பகங்கள் பெண்பாத்திரம் கொள்ளவில்லை. முகம் குழந்தைபோல் இருந்தது. இணைநண்பன் (boy fiend) இல்லை.

Continue reading “மைக்கேல்”

சைக்கிள் கலாச்சாரம்

நெதர்லாந்து சைக்கிள் கலாச்சாரம் கொண்ட நாடு. 17 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட அந்த நாட்டில் 22 மில்லியன் சைக்கிள் பாவனையில் உள்ளன. பயன்பாட்டு அடிப்படையில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட சைக்கிள்களை வைத்திருக்கிறார். குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை, தொழிலாளி தொடக்கம் அரசியல் தலைவர்கள் வரை சைக்கிளில் பயணிப்பதை நெதர்லாந்தில் காணலாம். நெதர்லாந்து சென்றபோது அந்தக் காட்சியைக் கண்டு வியந்திருக்கிறேன். அது ஒரு கலாச்சாரமாக சுழல்கிறது.

Continue reading “சைக்கிள் கலாச்சாரம்”

சுற்றுச்சூழலை ‘காதலிக்கும்’ விடுதி !

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தின் கல்பிட்டி பிரதேச எல்லைக்குள் ஒருபுறம் பாக்குநீரிணையையும் மறுபுறம் “டச் வளைகுடா”வையும் கொண்டுள்ள 14 சிறிய தீவுக்கூட்டங்கள் இருக்கின்றன. அதில் 25 ஹெக்ரர் பரப்பளவைக் கொண்ட இரண்டாவது பெரிய தீவு உச்சிமுனை என்று அழைக்கப்படுகிறது. இதை சுவிஸ் இனை தளமாகக் கொண்ட சுற்றுலா கம்பனியொன்று (Let’s Travel) 30 வருட குத்தகைக்கு எடுத்திருக்கிறது. மாலைதீவின் மாதிரி வடிவில் 150 நீர்சூழ் பங்களாக்கள் முளைக்கும் சுற்றுலா விடுதி தோன்ற இருக்கிறது. “சுற்றுச்சூழலை காதலிக்கும் விடுதி” என்ற பெயர்ப்பலகையோடு இத் திட்டம் உருவாகிறது.

Continue reading “சுற்றுச்சூழலை ‘காதலிக்கும்’ விடுதி !”

காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?

இலங்கையில் அரச எதிர்ப்புப் போராட்டத்தின் பின்னால் தீவிரவாதிகளும் புலம்பெயர் தமிழர்களும்தான் இருக்கிறார்கள் என மகிந்த கூறியிருக்கிறார். சிங்கள மக்கள் முன்னிலைப் பாத்திரம் அளித்து தொடங்கிய இந்த எழுச்சியை அவர் இலாவகமாகவே இனவாத அரசியலாக திசைதிருப்புகிறார்.

Continue reading “காலிமுகத் திடல் எதை ஒளித்து வைத்திருக்கிறது?”

ஒருவேளை..?

நாம் வாழுகிற கிராமம் சுமார் 7000 பேரை சனத்தொகையாகக் கொண்டது. இப்போது இருக்கும் வாடகை வீட்டில் 25 வருடங்களுக்கும் மேலாக வாழ்வு போய்க்கொண்டிருக்கிறது. வேறு இடம் மாற எந்த விருப்பும் வந்ததில்லை. வீட்டின் யன்னலுக்கூடாக தெரியும் அல்ப்ஸ் (Alps) மலைத்தொடரும் முன்-அல்ப்ஸ் (front Alps) மலைகளும் வேலையின் எல்லா களைப்புகளையும் வாரியள்ளி எடுத்துச் சென்றுவிடும். வீட்டின் செற்றியில் இருந்தபடியே அதை பார்த்துக்கொண்டிருப்பேன்.

Continue reading “ஒருவேளை..?”

பண்பாட்டு அசைவு

மேற்குலக மையவாதம் தனது பண்பாட்டை நியமமாக வைத்தே மற்றைய பண்பாடுகளை அளவிடுகிறது. அதேநேரம் தனது ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் எல்லா பண்பாடுகளையும் தனிமனித உரிமைகளையும் மதிக்கவேண்டும் என அதே மேற்குலகம் வகுப்பும் எடுக்கும். இந்த மேற்கத்தைய பண்பாடு காலனிய ஆதிக்கங்களுக்கு உட்பட்ட காலத்திலிருந்து இன்று உலகமயமாதலின் இணைய தொடர்பூடகப் புரட்சிவரை எமது தனித்துவங்கள் அடையாளங்களை தக்கவைப்பதை சவாலுக்கு உட்படுத்தியபடியே இருக்கிறது.

Continue reading “பண்பாட்டு அசைவு”

முஸ்கான் அலை

ஒவ்வொரு சம்பவங்களும் புதிதாக உருவாகிறது என்பதை விடவும், சமூகவலைத்தளங்களினாலும் இன்றைய தொழில்நுட்ப வசதியினாலும் அவை உடனுக்குடன் வெளிக்கொணரப்படுகிறது என்பதே பொருத்தமானது. எதிர்ப்புக்குரலுக்கு தளமாகவும் அநியாயங்களை காட்சி ரூபத்தில் அம்பலப்படுத்துவதாகவும் இன்றைய சமூக ஊடகங்கள் கிடைத்திருக்கின்றன என்ற அம்சங்கள் முக்கியமானது.

Continue reading “முஸ்கான் அலை”