அம்மாவும் அப்பாவும் நானும்

நான் அப்போது இளவயதினனாய் இருந்தேன். குறும்புகள் செய்யும் பருவம் அது. அது இலங்கை வரலாற்றில் பஞ்சப் புயல் வீசிய காலம். அரை இறாத்தல் பாணுக்காக நீண்ட வரிசையில் சில்வா பேக்கரியிலும் சங்கக் கடையிலும் என முண்டியடித்த காலம் அது. இந்த பாண்வேட்டையின்பின் அன்று அதிகாலை இருளில் நானும் நண்பர்களும் எமது வாசிகசாலையில் சுவாரசியத்துக்காகக் காத்திருந்தோம்.

Continue reading “அம்மாவும் அப்பாவும் நானும்”

போய்வா அம்மா போய்வா

பெரும் தோப்பிலிருந்து குருவியொன்று
வீரிட்டுப் பறந்து வந்தது உன்
மரணச் சேதியுடன்.
அம்மா!
எனது சிறுபராயம் முதலான நினைவுகளை
அது தன் சின்னக் காலால்
கோதிக்கோதி என்
மனதைக் கசியவிட்டது.
யாரொடு நோவேன்!

Continue reading “போய்வா அம்மா போய்வா”

ஒபாமா: கண்ணீரால் வரவேற்கப்பட்டவன்

obama

இந்த நாட்டில் நான் மதிக்கப்படுகிறேனில்லை, ஏனெனில் நான் ஒரு கறுப்பன். பதவி உயர்வில் அலட்சியப்படுத்தப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். ஒரு கிரிமினலாக கவனிக்கப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். உங்களில் பல ஆயிரம்பேர் அவருக்கு வாக்களிக்க விருப்பமில்லை, ஏனெனில் அவர் ஒரு கறுப்பன், ஆனால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரிவதில்லை. எனக்கு மட்டும் அது தெரியவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்…

Continue reading “ஒபாமா: கண்ணீரால் வரவேற்கப்பட்டவன்”

கையெழுத்து வேட்டை அரசியல்

தேசம் நெற் இணையத்தளத்துக்கு எழுதப்பட்டது தொடர்பாக..

இந்த அறிக்கையில் எனது பெயரும் (அடைமொழியுடன்) வந்திருக்கிறது. அறிக்கை இணையத்தளத்தில் வெளிவந்த பின்னரே அதை நான் வாசித்தேன். இதற்கு முன்னர் இது எமக்கு மின்னஞ்சல்மூலம் வந்திருந்தபோதும் இதை நான் வாசித்திருக்கவில்லை. அனுமதியின்றி எனது பெயரைப் போட்டது தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.

ஒரே அலையில் நீச்சலடித்தல்

சுவிஸ் இல் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய கருத்தரங்கை முன்வைத்தும், 

அதற்கு வெளியிலும்…

18.5.2008 அன்று இந்தக் கலந்துரையாடல் நடந்தது. சுமார் 40 பேர் பங்குபற்றியிருந்தனர். வடக்குக் கிழக்கு பிரிப்புப் பற்றியதும் கிழக்கின் நிலை பற்றியதுமான கருத்தரங்காக இது விரிந்திருந்தது. வடக்குக் கிழக்குப் பிரிப்பைப் பற்றிய விவாதம் அவசியமற்று இருந்தது. அதை அநேகமாக எல்லோருமே ஏற்றுக்கொண்டிருந்தார்கள். கிழக்கின் நிலை பற்றிய விவாதங்கள் நடந்தன. எதிர்விவாதங்களின் வலு குன்றி இருந்தாகவே எனது கணிப்பு. கலந்துரையாடல் நெடுகிலும் புலியெதிர்ப்பு மனஉளவு நிலையிலிருந்து வெளிவர முடியாது கருத்துக்கள் கணிசமானளவு இருந்ததாகச் சொல்ல முடியும். இது ஒன்றும் ஏதோ புதிய விடயமுமல்ல. இன்று ஐரோப்பிய சந்திப்புகள் எல்லாமே அல்லது கருத்தாடல்கள் எல்லாமே இதற்குள் புதையுண்டதாக சொல்லப்படுவது கவனத்திற்குரியதுதான்.

Continue reading “ஒரே அலையில் நீச்சலடித்தல்”

தோழர் பரா – இரங்கல் செய்தி

இன்று இந்த இறுதிநிகழ்வில் கலந்தகொள்ளமுடியாமல் போனது நான் எதிர்பாராத ஒன்று. அதனால்; எனது இரங்கல்செய்தியை தோழர் பராவின் இறுதிச்சூழலுக்குள் அனுப்பிவைத்துள்ளேன்.
—————————

புலம்பெயர்ந்து வாழ்தல் ~பாய்விரித்தால் படுத்துறங்கும் நாய்ச்சாதி| என்று பழிக்கப்பட்ட காலங்களை, அதன் ஈழஅறிவினை தூசாய்த் தட்டிவிட்டது மாற்றுக் கருத்துக்களின் முளைப்பும் அதன் தொடர்ச்சியும் என்பது நம்பக்க நியாயம். ஆம் இந்த உழைப்பு ஆரம்பகாலங்களில் வித்தாய் இடப்பட்டதில் தோழர் பரா அவர்களின் பணி புகலிடத்தில் தொடங்கிற்று.

Continue reading “தோழர் பரா – இரங்கல் செய்தி”

20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு

இலங்கை தலித் மேம்பாட்டு முன்னணி நடத்தும் முதலாவது தலித் மாநாட்டு முகம்… கறுப்புப் பின்னணியில் அதன் எழுத்திருப்பு… அருகில் பெரியார் அம்பேத்கார், டானியல், எம்.சி.சுப்பிரமணியம், எஸ்.ரி.என்.நாகரட்ணம் என வரைவோவியம்… முன்னால் ஒரு ஒலிவாங்கி. இருக்கைகள் நாற்திசையும் வரைந்த கோடுகளில் ஆர்வலர்கள் புள்ளிகளானார்கள். வழமையாகவே நேரத்தைக் கடைப்பிடிப்பதில் பேர்போன எமது பாரம்பரியத்திற்கு பிரான்ஸ் போக்குவரத்தின் வேலைநிறுத்தம் வேறு. நேரத்துக்கு வரத்துடித்தோரையும் அங்கங்கு ரயில் நிலையங்களிலும், வாகனநெரிசலிடை துண்டுகளாய்த் தெரிந்த வீதிகளிலும் காக்கவைத்து அரிப்புக்கொடுத்துக் கொண்டிருந்தது வேலைநிறுத்தம். Continue reading “20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு”

தோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி

சூரிச், சுவிஸ்

18.2.2007. ஞாயிற்றுக்கிழமை. நேரம் சுமார் 3 மணியைத் தாண்டியது. பகல் வெளிச்சத்தின் நுழைவுகளை தொடர்யன்னலினூடாக தாராளமாய் அனுமதித்திருந்தது அந்த மண்டபம். மண்டபத்தின் முன்பகுதியில் தேசபிதா தோழர் ரட்ணா என்று எழுதப்பட்ட எழுத்துக்களின் சொந்தக்காரனான இளையதம்பி இரத்தினசபாபதியின் நிழற்படம் சிவப்பு நிறத்துணியுடன் இசைந்துபோய் இருந்தது.

Continue reading “தோழர் இரத்தினசபாபதி நினைவுகூரல் நிகழ்ச்சி”

இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு?

துயரமான செய்தி. மீண்டும் ஒரு உயிர் தீயில் தன்னைக் கருக்கியிருக்கிறது. ஜெனீவாhவில் ஐநா சபைக்கு முன்பாக 12.02.2009 அன்று முருகதாஸ் என்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியிக்கிறான். போராட்டம் என்பதே வாழ்தலுக்கானது. வாழ்தலை அழித்துக்கொள்கிறபோது போராட்டம் என்பதற்கு என்ன பொருள்தான் வேண்டியிருக்கிறது. எனவே தற்கொலைகள் போராட்ட வழிமுறையாக கைக்கொள்ளப்படுவதற்கு எதிரான கருத்துநிலைகள் வலுப்பெற வேண்டும்.

Continue reading “இந்த அவலத்துக்கு யார் பொறுப்பு?”

கமரா எழுதிய கவிதைகள்

குறுந்திரைப்பட விழா
யூரோ மூவிஸ்
சுவிஸ்
15 பெப்ரவரி 2003

பனிக்கால விடுமுறையில் உயிர்ப்பித்தலின்றி மரங்கள் அமைதியாய் உறக்கமுற்றிருந்தன. கிராமத்தின் எளிமை பார்வைமீது இதமாக வீச…தேவாலயத்தை அண்மித்தேன். எந்த அசுமாத்தமும் இல்லை. அமைதி என்னை தொந்தரவு செய்ய மண்டப வாசல் தேடினேன். நேரம் பத்து மணியை தாண்டியிருந்தது. இருள் வேண்டப்பட்ட அந்த மண்டபத்துள் நுழைந்து ஒரு இருப்பிடம் தேடவும் ஆங்கில மொழியில் விவரணம் சூழ்ந்து என்னை தனக்குள் இழுத்துக் கொண்டது. நேதாஜி. நேதாஜி சுபாஸ் சநதிரபோஸ் பற்றியும் அவரின் ஐ.என்.ஏ (இந்திய தேசிய இராணுவம்) பற்றியுமான விவரணப் படம் போய்க் கொண்டிருந்தது.

Continue reading “கமரா எழுதிய கவிதைகள்”