ஒவ்வொரு சம்பவங்களும் புதிதாக உருவாகிறது என்பதை விடவும், சமூகவலைத்தளங்களினாலும் இன்றைய தொழில்நுட்ப வசதியினாலும் அவை உடனுக்குடன் வெளிக்கொணரப்படுகிறது என்பதே பொருத்தமானது. எதிர்ப்புக்குரலுக்கு தளமாகவும் அநியாயங்களை காட்சி ரூபத்தில் அம்பலப்படுத்துவதாகவும் இன்றைய சமூக ஊடகங்கள் கிடைத்திருக்கின்றன என்ற அம்சங்கள் முக்கியமானது.
Continue reading “முஸ்கான் அலை”Category: பதிவு
முடிச்சுகள்
பருத்தித்துறை காட்லிக் கல்லூரியில் 70 களில் முதலில் மைக்கல் கெலி என்ற ஆங்கிலேயர் இங்கிலாந்திலிருந்து ஆங்கில பாடம் படிப்பிக்க வந்திருந்தார். கொளுத்தும் வெயில் காலத்தில் அவர் கட்டைக் காற்சட்டையுடன் வந்தபோது கல்லூரி நிர்வாகம் அவரை அழைத்து நீளக்காற்சட்டை அணிந்து வருவதே கல்லூரியின் ‘டிசிப்பிளின்’ என்று சொல்ல, அவர் வீடு சென்று திரும்ப நீளக் காற்சட்டையுடன் வந்தார். எம்மைப்போல் அவரால் வெயிலை தாங்க முடியாததால் மிக அவதிப்பட்டார். கல்லூரி அசையவில்லை.
Continue reading “முடிச்சுகள்”பிச்சைப் பாத்திரம்
கல்லூரியொன்றில் நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது கணித ஆசிரியர் கேத்திரகணித தேற்றம் ஒன்றை நிறுவிக்காட்ட வகுப்பை ஏவினார். நான் சரியாகத்தான் நிறுவியிருந்தேன். ஆனால் வகுப்பின் முன்னால் நிற்கவைத்து பிரம்பால் தாக்கப்பட்டேன். “கேத்திரகணித புத்தகத்தில் ABC ஒரு முக்கோணம் என சொல்லி இத் தேற்றம் நிறுவப்பட்டிருக்கிறது. நீ XYZ ஒரு முக்கோணம் என போட்டு நிறுவியிருக்கிறாய். நீ எங்கையோ ரியூசனுக்குப் போகிறாய்” என்று அடித்தார். சிறிமாகால பஞ்சத்தில் இரண்டு வேளை கொஞ்சமாகச் சாப்பிடுவதே போராட்டமாயிருந்தபோது எங்கை ரியூசனுக்குப் போவதாம். இல்லை என்று மட்டும் சொன்னேன். அடியை வாங்கினேன். மாற்றி யோசிக்க நினைத்துப் பார்க்கக் கூடாதா என்ற உள்மனக் கேள்வியுடன் போய் அமர்ந்தேன்.
Continue reading “பிச்சைப் பாத்திரம்”Vincent Van-Gogoh
கொலண்ட்டைச் சேர்ந்த வின்சன்ற் வான்கோ (1853-1890) ஒரு புகழ்பெற்ற post-impressionist ஓவியர். மேற்குலக ஓவிய வரலாற்றில் பாரிய தாக்கம் செலுத்தியவர்களில் அவரும் ஒருவர். ஒரு பத்து வருட காலத்தில் 2100 ஓவியங்களை அவர் வரைந்திருந்தார். இவைகளில் பெரும்பாலானவற்றை அவர் தனது வாழ்வின் கடைசி இரு வருடங்களில் வரைந்து தள்ளினார்.
Continue reading “Vincent Van-Gogoh”Pixel Forest Turicum
சுவிஸ் கலைஞை Pipilotti Rist அவர்கள் (1962) பிரபல சூரிச் நகர கலைக்கூடத்தில் ( Zurich Kunsthaus) தனது கலை வேலைப்பாடொன்றை காட்சிப்படுத்தியுள்ளார். நவீன தொழில்நுட்பங்களையும் (கணனி, LED விளக்குகள்), கணக்கிடல்களையும் பாவித்து மண்டபம் ஒன்றை வேறு உலகமாக சிருஸ்டித்துள்ளார். 3000 லெட் விளக்குகள் ‘பளிங்குச் சிற்பி’க்குள் ஒளிர தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
Continue reading “Pixel Forest Turicum”நெருக்கடி
நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறு தீவு இலங்கை. நாம் ரின் மீனை இறக்குமதி செய்கிறோம். நிலமும் நீர்வளமும் வெயிலும் மழையும் உள்ள இந்த நிலத்தில் காய்கறிகளுக்காக அழுகிறோம். வீட்டுத் தோட்டங்களும் பற்றை வளர்ந்து கிடக்க மோட்டார் சைக்கிளில் ஊர்சுற்றுகிறோம். சில நூறு மீற்றர் தொலைவிலுள்ள கடையில் ஒரு கிலோ வெங்காயம் வாங்க மோட்டார் சைக்கிளை கலைக்கிறோம். யாழ்ப்பாண வாழ்நிலை இது. புகலிடம் வடபகுதிக்குள் காவி வந்த பவுசு, சொகுசு கலாச்சாரம் இதில் பெரும் பங்கை ஆற்றியிருக்கிறது.
Continue reading “நெருக்கடி”யொஹானியின் பாடல்
யொஹானி!. இலங்கையைச் சேர்ந்த இந்த இளம் பாடகி. அண்மையில் பாடிய “மெனிக்கே மகே கித்தே” என்ற காதல் பாடல் அவருக்கே ஆச்சரியமூட்டக்கூடிய விதத்தில் இன்று 150 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை (views) தாண்டி தொடர்ந்துகொண்டிருக்கிறது. இசைத்துறையில் அவரது இயல்பான ஈடுபாடும் முயற்சியும் ஒருபுறம் இருக்க, இன்றைய சமூகவலைத்தளங்களின் வீச்சு அவருக்கு சாதகமாக அமைந்த சந்தர்ப்பமும் சேர்ந்து அவரை திடீரெனத் தோன்றிய நட்சத்திரமாக ஒளிவீச விட்டுள்ளது. அதற்கு அவர் தகுதியானவர்தான் என்ற மதிப்பீட்டை -அவரது எல்லா பாடல்களையும் பார்க்கிறபோது- வந்தடைய முடிகிறது.
Continue reading “யொஹானியின் பாடல்”வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !
ஈழத்தில் சாதிய மனநிலை மீண்டும் வன்முறையை முன்னுக்குத் தள்ளி வீரியமடைவதை வட்டுக்கோட்டையில் 19.09.2021 நடந்த சாதிய ரீதியிலான தாக்குதல் நிரூபித்துள்ளது. வெறும் கையுடன் தமது அன்றாட வாழ்வை கூலித்தொழில் மூலம் ஓட்டிக்கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக, வேலைவெட்டியின்றி வெளிநாட்டுப் பணத்தில் சீவியம் நடத்தும் ஆதிக்கசாதி இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து வாள்சுழற்றியிருக்கிறார்கள். அரை மணித்தியாலம் அந்தத் தெருவையே கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள். வெறியாட்டம் ஆடியிருக்கிறார்கள்.
Continue reading “வட்டுக்கோட்டையில் சாதிப் பிசாசு !”துணிச்சல்காரி
Malalai Joya
மேற்குலகின் தயாரிப்பாகி நோபல் பரிசுவரை சென்றிருக்கும் மலாலாய் அல்ல இந்த மலாலை. இவர் மேற்குலகையும் விமர்சிக்கும் மலாலாய் யோயா
இந்ததத் துணிச்சலான ஆப்கான் பெண்ணை தெரிந்துவைத்திருங்கள். இவை பழைய காணொளிகளும் பதிவுகளும். அறிமுகத்திற்காக இங்கு பதிகிறேன். தற்போதைய ஆப்கான் நிலைமையில் இந்த துணிச்சல்காரியின் பாதுகாப்பு முக்கியம். அவளது குரல் வெளிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
// ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் போர்க்குற்றவாளிகளும்தான் இந்த குழுவில் இருக்கப்போகிறவர்கள். அரசியலைப்புச் சட்டத்தை வரைவதற்கான குழுவில் யார்யாரெல்லாம் இருக்கவேண்டும் என ஏற்கனவே தீர்மானித்த முடிவுகளோடுதான் நீங்கள் இங்கு வந்து குந்தியிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருமே கிரிமினல் குற்றவாளிகள். இவர்கள்தான் நமது நாட்டின்மீது நடாத்தப்படுகிற போர்களுக்கும் உள்நாட்டுப் போர்களுக்கும் காரணமானவர்கள். பெண்களுக்கு எதிரான மோசமான ஒடுக்குமுறைகளை செய்பவர்களும் இவர்களே. இவ்வாறான மோசமான கிரிமினல்களிடம்தான் நாட்டின் தலைவிதியை ஒப்படைக்கிறோம். இவர்கள் பதவிகளுக்கு உரியவர்களல்ல. அவர்கள் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளிகள். வரலாறு இவர்களை ஒருபோதும் மன்னிக்காது.//
- இரு பழைய கட்டுரைகள் இவை
- https://sudumanal.com/2016/07/16/the-bravest-woman-malalai-joya/
- https://sudumanal.com/2015/06/28/dust-in-the-eyes-of-the-world/
- காணொளி
ஹிஷாலினிகள்
முன்னாள் அமைச்சரும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக அமர்த்தப்பட்ட ஹிஷாலினியின் மரணம் உயிர்த்தெழும்பியிருக்கிறது. அது ஒரு குறியீட்டு வடிவமாக மாறியிருப்பதே அதன் சிறப்பம்சம். அது ஹிஷாலினிகள் குறித்த கரிசனையையும், பொதுவெளிக்குள் நிகழ்த்தப்படும் எதிர்ப்புணர்வுகளையும் வெளிப்படைத்தன்மையையும்; -தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுள்- நிகழ்த்திக்கொண்டிருப்பது முன்னோக்கிய ஒரு மாற்றம்தான். அது கொலையா அல்லது தற்கொலையா என்பதை அரசியல் தலையீடுகளற்றதும் நேர்மையானதுமான பொலிஸ் விசாரணையும் நீதிமன்றமும்தான் புலப்படுத்த முடியும்.
Continue reading “ஹிஷாலினிகள்”