Archive for the ‘பதிவு’ Category
பச்சைக் குதிரை
Posted January 17, 2021
on:- In: அறிமுகம் | இதழியல் | பதிவு
- Leave a Comment
எனது வாசிப்பு
பச்சைக் குதிரை ஒரு விளையாட்டு. அது இங்கே படிமமாக நாவலில் விரிகிறது. குனிஞ்சு நிக்கணும். ஒவ்வொருவரா தாண்டணும். குனிஞ்சு நிக்கிறவங்க மெல்ல உயரத்தைக் கூட்டினாலும் அவங்களைத் தாண்டிற வெறியோடு அவங்க முதுகை அமத்தி பாய்ந்து கடக்க வேண்டும்.
Read the rest of this entry »- In: டயரி | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
கோவிட்-19 இலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
12 நவம்பர் 2020. வழமைபோல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன். உடலில் ஒரு சோர்வு தெரிகிறது. மதியச் சாப்பாட்டின் பின்னர் மீண்டும் தயக்கத்துடன் வேலையைத் தொடங்குகிறேன். உடல் பலமிழப்பது போலவும் மனம் எதிலும் பற்றற்று நழுவுவது போலவும் தெரியத் தொடங்குகிறது. இடையில் வேலையை நிறுத்திவிட்டு வீட்டுக்கு வருகிறேன். விழுந்து படுக்கிறேன். அன்றிரவே உடலின் மூட்டுகளை கழற்ற எத்தனித்துக் கொண்டிருக்கிற உளைவுப் படை உடலை உலுக்கி உலுக்கி அடித்துப் போடுகிறது. சுகவீனகால வழமையான அனுபவமல்ல இது. தெரிந்துவிட்டது. கொரோனாதான்.
Read the rest of this entry »- In: அறிமுகம் | இதழியல் | பதிவு
- Leave a Comment
புகைப்படங்களும் காணொளியும்
- அறிமுகம்
நேரில் :
மாலினி மாலா (யேர்மனி)
ராஜன் (சுவிஸ்)
இணையவழி :
புதியமாதவி (மும்பை)
சண்முகராஜா (தமிழகம்) - வாசகர் பகிர்வு

வெற்றிகொள்ள முடியாதா என்ன!
Posted July 11, 2020
on:- In: பதிவு | விமர்சனம்
- 2 Comments
முகநூலில் நடந்த சாதிய கதையாடல்களை முன்வைத்து…
பகுதி-1
இந்த உலகம் ஓர் இனவாத உலகம். இனவாதம் தொன்றுதொட்டு வெவ்வேறு வடிவங்களில் நிலவிவருகிறது. ஜோர்ஜ் புளொய்ட் கொலை நிறவெறி வடிவிலான அமெரிக்க இனவாதத்தினதும், மறுதலையாக அந்த இனவாதத்துக்கு எதிரான மக்கள் மனநிலையினதும் ஓர் குறியீடு. அது அதிர்வலையை மட்டுமல்ல, பல கேள்விகளையும் எமது சிந்தனையில் எழுப்பியிருக்கிறது. அடிமை வாழ்வின் இழிவுபடுத்தல்களோடும், தனித்துவமான ஆபிரிக்கப் பண்பாடுகளின் அழிப்புகளோடும், வெள்ளை மேலாதிக்கத்தோடும் இயங்கிய இனவாத காலகட்டமானது கறுப்பின மக்களை மனிதப்பிறவிபோல நடத்தாத ஓர் வரலாற்று குரூரம் வாய்ந்தது. இந்த மனநிலையுடன் கறுப்பின மக்கள் அடிமைகளாக பிடிக்கப்பட்டு அமெரிக்காவினுள் கொண்டுவரப்பட்டார்கள். சுமார் நூற்றியைம்பது வருடங்களின் முன்னர் மிகமிகச் சிறிதான வெள்ளையர்கள் மட்டுமே -அதுவும் குறிப்பாக கத்தோலிக்க மதத்தை தமது ஆத்மாவில் ஏற்றுக்கொண்ட வெள்ளையர்களே- மனிதாபிமான அடிப்படையில் அடிமை முறைமையை தமது வலுவுக்குள் நின்று எதிர்த்தார்கள். கறுப்பின அடிமை வாழ்விலிருந்து உதிரிகளாக தப்பியோடிய கறுப்பின மக்களை கனடாவுக்குள் எல்லை கடந்து செல்ல உதவினார்கள். பொதுப்புத்தி என்பது முற்றாகவே வெள்ளை மேலாதிக்க கருத்தியலோடும் கற்பிதங்களோடும் வெள்ளையின சமூகத்தை இயக்கியது.
நிகழ்காலத் துயரம்
Posted April 17, 2020
on:பகிர்ந்து வாழ்வோம்
Posted April 8, 2020
on:- In: பதிவு
- Leave a Comment
இலங்கையின் இயற்கை அழகின் திரட்சி மலையகம். அதை இப்படியான செழிப்பு பூமியாய் மாற்றி இலங்கையின் அந்நியச் செலாவணியின் முக்கால் பங்கிற்கு மேலான வருமானத்தை ஈட்டித்தருகிற அந்தப் பூமியின் மக்கள் காலாகாலமாகவே திட்டமிடப்பட்ட விதத்தில் ஏழையாக, விளம்புநிலை மக்களாக வைக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.
அழிந்து போகுமா?
Posted February 10, 2020
on:பகடிவதையின் வேர்கள் குடும்பம், பாடசாலை போன்ற சமூகநிறுவனங்களில் பரந்து விரிந்திருக்கிறது. குடும்பத்துக்குள்ளோ பாடசாலையிலோ உறவு முறை அதிகாரம் சார்ந்தே செயற்படுகிறது. பெற்றோருடன் ஒரு பிள்ளை சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. பாடசாலையில் ஆசிரியருடன் சமனாக இருந்து உரையாட முடிவதில்லை. தமது கருத்துகளை அச்சமின்றி முன்வைக்க முடிவதில்லை. அவர்களது ஆலோசனைகள் கருத்தில் எடுக்கப்படுவதுமில்லை. இந்த நிறுவனங்களுள் கல்வி சார்ந்த அடக்குமுறையும் அழுத்தமும் (பாடசாலையாலும் குடும்பத்தாலும்) இணைந்தே செயற்படுத்தப்படுகிறது. பக்கத்து வீட்டுக்காரன்கூட “போய்ப் படியடா” என்று பிடரியில் தட்டுகிற உரிமையைக் கொண்டுள்ளான் என்பது எவளவு துயரமானது.
இனி கடுப்பேத்த முடியாது!
Posted October 10, 2019
on:- In: டயரி | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
கலைஞன் சண்முகராஜாவுடனான சந்திப்பு – சுவிஸ்
பாடசாலை மாணவனாக இருக்கும்போது இரவில் ரியூசன் முடிந்து சைக்கிளில் டபிள் வருகிறோம், நானும் நண்பனும்! பொலிஸ் மறிக்கிறது. கன்னத்தில் பலமாக அறைந்தான் ஒரு பொலிஸ். எனது தலைக்குள் வெள்ளிகள் தோன்றி மறைந்தன. நான் மண்ணுக்கு திரும்பி வந்தபோது நண்பனை சைக்கிள் ரியுப் இனுள்ளிருந்து காற்றை திறந்துவிட பணித்திருந்தான் மற்ற பொலிஸ்.
அன்று தொடங்கிய பொலிஸ் மீதான வெறுப்பானது இயக்க போராளிகளை தேடுதல் வேட்டை, கைது சித்திரவதை, விசாரணை, உளவுபார்த்தல் என பொலிஸ் களமிறங்கியபோது பன்மடங்கு கடுப்பாக்கிவிட்டிருந்தது. தவறுசெய்யாமலே பயப்பட வேண்டி வைத்த காக்கிச் சட்டை அரச வன்முறை இயந்திரத்தின் குறியீடாய், தகர்த்தெறியப்பட வேண்டிய ஒன்றாய், வெறுப்புக்குரிய ஒன்றாய் மாறிவிட்டிருந்தது. இப்போதும் சினிமாவில் காக்கிச் சட்டையைக் கண்டால் எனக்குள்ளிருந்து ‘ஒருவன்’ சிலிர்த்தெழுந்துவிடுவான்.
ஒரு கலைஞனும் நாங்களும்
Posted September 29, 2019
on:- In: உரை | டயரி | பதிவு
- Leave a Comment
பண்பாட்டுச் சுவைப்பதக் கூறுகளின் பகிர்வு
தமிழ் திரைப்பட நடிகர், நாடக இயக்குனர் மற்றும் மதுரை நிகழ் நாடக மைய இயக்குனர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சண்முகராஜா அவர்களின் சுவிஸ் வருகையின் ஒரு அங்கமாக Kulturzentrum, Thalwil அமைப்பும் சுவிஸ்- இந்திய கலாச்சாரத் திட்டம் (SICP)அமைப்பும் ஒரு கலாச்சாரச் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தது.
- In: நினைவு | பதிவு
- Leave a Comment
30.7.2012 விடியல் சிவா காலமாகி இப்போ ஏழு ஆண்டுகளாகிவிட்டிருக்கிறது. சில இழப்புகள் ஏற்படுத்திச் செல்லுகிற நினைவு இறக்கிவைக்க முடியாதவை. பிரக்ஞைபூர்வமாக தனது வாழ்வை வாழ்ந்து காட்டிய விடியல் சிவாவின் நினைவும் அத்தகையது. நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.
அவரது மரணத்துக்கு சில தினங்களின் முன் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய் அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.