ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமாகிய தோழர் தேவா அவர்கள் கடந்த 25.03.2023 அன்று தனது 70 வது வயதில் எமை விட்டுப் பிரிந்தார். 1983 இலிருந்து சுவிஸ் இல் தொடர்ச்சியாக வேலைசெய்து, பின் ஓய்வுபெற்று தான் பிறந்த மன்னார் மண்ணுக்கு திரும்பி வாழ்ந்து வந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலம், டொச் (ஜேர்மன் மொழி), சிங்களம் ஆகிய மொழிகளில் ஆழமான புலமையுடையவராக இருந்தார். நீண்ட இழுத்தடிப்புகளோடு குழந்தைப் போராளிகள் என்ற நூலை சுவிஸிலிருந்தபோது முதல் நூலாக வெளிக்கொணர்ந்த அவர் இலங்கையில் இருந்தபோது அம்பரயா, அனொனிமா, நீண்ட காத்திருப்பு, என் பெயர் விக்டோரியா போன்ற முக்கியமான நூல்களை தமிழுக்குப் பெயர்த்திருந்தார். அவரது மரணம் அதிர்ச்சியாக இருக்கிறது. தோழர் தேவாவுடனான நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.
Continue reading “தோழர் தேவா- நினைவுக் குறிப்பு”Category: நினைவு
விடியல் சிவா – ஒரு நினைவுக் குறிப்பு
30.7.2012 விடியல் சிவா காலமாகி இப்போ ஏழு ஆண்டுகளாகிவிட்டிருக்கிறது. சில இழப்புகள் ஏற்படுத்திச் செல்லுகிற நினைவு இறக்கிவைக்க முடியாதவை. பிரக்ஞைபூர்வமாக தனது வாழ்வை வாழ்ந்து காட்டிய விடியல் சிவாவின் நினைவும் அத்தகையது. நினைவுகளை மீட்டுப் பார்க்கிறேன்.
அவரது மரணத்துக்கு சில தினங்களின் முன் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய் அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
யூலைக்கால நினைவுக் குறிப்பு
1983 யூலை கடைசிப் பகுதி. இரத்மலானை விமான நிலையம் அகதிமுகாமாக உருமாறியிருந்தது. ஆயிரக்கணக்கான அகதிகள். குழந்தைமையிலிருந்து கிழம்வரை பருவமுற்றிருந்தனர் அவர்கள். நாம் 55 பேரும் ஓரிடத்தில் குழவாகியிருந்தோம். படுக்கை, இருப்பு எல்லாம் அந்த இடத்துண்டை எமது பிரதேசமாக ஆக்கியிருந்தது. அனைவரும் மொரட்டுவ பல்கலைக் கழகத்திலிருந்து பத்திரமாக கொண்டுவரப்பட்டிருந்தோம். எம்மாலான உதவிப் பணிகளில் நாம் அநேகமாக ஓய்வற்றிருந்தோம். ஒரு கண்டத்தை கடந்து வந்ததான நினைப்பு எல்லாக் களைப்பையும் வெற்றிகொண்டது.
அது அழியா!
பத்து வருடங்களுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் ‘உலகம் முடிகிற இடமாக அமைந்து’ காவுகொண்ட உயிர்களை நினைவுகூர்கிறேன். அது ஓர் இனப்படுகொலை என (என்போல்) வரைபுசெய்பவர்களோ, கூட்டுப் படுகொலை என வரைபுசெய்பவர்களோ எவர்களாகிலும் முள்ளிவாய்க்காலை நினைவுகூர்வதில் ஒரே புள்ளியில்தான் நிற்க முடியும்.
சொன்னேனில்லை
அனுபவக் குறிப்பு
2019.
எனது முதல் பயணம் அந்த ஊருக்கு. மாசி மாத வெயில் கையில் ஒரு தண்ணீர்ப் போத்தலுடன் ஆட்டோவில் எனை ஏற்றி அனுப்பிவைத்திருந்தது. மலைகளற்ற பூமி இன்னொருவகை அழகை உடுத்தியிருந்தது. சுவிசிலிருந்து புறப்பட்டபோது வீதியோர பனித்திரள்களின் குளிரசைப்புக்கு எதிர்நிலையாக, நான் புழுதி அளைந்து திரிந்த மண் சூட்டை கொளுத்திப் போட்டிருந்தது. வியர்வையற்ற நாட்களின் உலகிலிருந்து -உள்ளங்கால் தொடங்கி உச்சந் தலைவரை- வியர்வைத் துளிகளை பெய்துகொண்டிருந்த நாட்களின் உலகிற்குப் பெயர்க்கப்பட்ட எனது உடல் ஏதோவொன்றை சுகித்துக் கொண்டிருந்தது.
அஞ்சலி !

வாழைப்பழ ‘சோசலிசம்’
1984-85 . தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் இயக்கத்தின் அலுவலகம் இருந்தது. சில பல மைல்கள் தொலைவில் ஒரு பஞ்சாயத்து தலைவரின் காணிக்குள் அந்த அமைப்பின் தொலைத் தொடர்பு பயிற்சி முகாம் இருந்தது. அது ‘சலுகைகள்’ கூடிய முகாமாக இருந்தது. ஏனைய முகாம்கள் சவுக்கம் காடுகளுக்குள்ளும் பொட்டல் காடுகளுக்குள்ளும் வெந்து வேக, இந்த முகாமோ ஊருக்குள் தென்னந்தோப்புக்குள் குளிர்மையாய் சீவித்தது. அருகால் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். சமார் 40 பேரைக்கொண்ட இந்த முகாம் எல்லோரையும் ஒரே குடும்பமாக இணைத்து வைத்திருந்தது.. மிக வெளிப்படைத்தன்மையாக அந்த வாழ்வு இயங்கியது. வாழ்வின் மகத்தான தருணங்கள் அவை.
குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்
கிறிஸ்துவுக்குமுன் 4000 வருட பழமை வாய்ந்ததாக நவீன வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிற “குத்துச்சண்டை”யின் வேர் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது என்கின்றனர்.. இது கிரேக்கம் மற்றும் றோம் போன்ற இடங்களிலும் விளையாடப்பட்டது. அது Pugilism என அழைக்கப்பட்டது.
ஆவணப்படுத்தப்பட்ட முதல் குத்துச்சண்டை போட்டி 1681 இல் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. “குத்துச்சண்டையின் தந்தை” என அழைக்கப்படும் Jack Baugton 1743 இல் முதன்முதலில் குத்துச்சண்டையை ஒரு விளையாட்டு (sport) என்ற வடிவத்துள் கொண்டுவருவதற்கான சில விதிகளை அறிமுகப்படுத்தினார். 1865 இல் பாரிய மாற்றங்கள் கொண்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய விதிகளின் தொடக்கப்புள்ளி அதுவாகவே இருந்தது. 1904 இல் முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையும் உள்ளடக்கப்பட்டது.
Continue reading “குத்துச்சண்டையின் தடங்களும் முகமது அலியும்”
யாழ்நூல் நிலைய நினைவுகூரல் !
33 வருடங்கள் கடந்துவிட்டது. யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டது வரலாற்றின் மிகப் பெரும் பண்பாட்டுக் கொலை. இது ஓர் இனத்தின் அறிவுத் தளத்தின் முதகெலும்பை முறிக்கும் சதி. அதனால் அது இனப்படுகொலையின் ஒரு அங்கம்.
வசதியற்றவர்களுக்கும் அது ஒரு அறிவுப்பிரசாதமாக இருந்து கைகொடுத்திருக்கிறது. அது தலித்துகள் உட்பட விளிம்புநிலை மாந்தரையும் சென்றடைந்தது. தெற்காசியாவிலேயே மிகப்பெரும் நூல்நிலையமாக அது வளர்ந்த கதையின் பின்னால் இருந்த உழைப்புகள் அர்ப்பணிப்புகள் எவ்வளவு இருந்திருக்க வேண்டும்.
ஒரு நட்புக் குறிப்பு
மந்திகை என்றால் பலருக்கும் “விசர் ஆஸ்பத்திரி” என்றவாறுதான் முதலில் கிளிக் பண்ணும். நமட்டாய் சிரிப்பும் வரும். அப்போதெல்லாம் நான் ஒரு பதில் வைத்திருந்தேன். கார் உள்ள இடத்தில்தான் கராஜ் இருக்கும்.. மூளை உள்ள இடத்தில்தான் அதுக்கான ஆஸ்பத்திரி இருக்கும் என.
உண்மையில் அது “விசர் ஆஸ்பத்திரி“ அல்ல. பொது மருத்துவமனை. பைத்தியத்தை குணமாக்கும் முயற்சியில் தனது அறிவெல்லைக்குள் செயற்பட்ட பகுதியையும் உள்ளடக்கிய மருத்துவமனை. குழந்தைப் பேறு மருத்துவமனையும்கூட. அதன் சேவை குறைபாடுகளையும் கடந்து எப்போதுமே உயர்ந்துதான் நிற்கும். அதிலும் மனநோய்க்கான வைத்தியர்களின் சேவை எப்போதும் அர்ப்பணிப்பு நிறைந்ததாகவே எனது காலத்தில் நினைவுகூர்கிறேன்.