பார்ஹா (Farha)

ஜோர்தான் திரைப்படம்

இஸ்ரேல் நாடு (1947-1949) உருவாக்கத்தின்போது, 1948 இல் இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனம் மீது நிகழ்த்திய பெரும் இனச்சுத்திகரிப்பும் படுகொலைகளுமான சம்பவம் நக்பா (nakba) என -அரேபிய மொழியில்- அழைக்கப்படும். பல கிராமங்களையும் நகரங்களையும் இனச்சுத்திகரிப்புச் செய்து இஸ்ரேல் அப் பிரதேசங்களை தன்வசமாக்கியது. இவ் வரலாற்றுக் கொடுமையின்போது ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட பலஸ்தீன மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். வெளியேற மறுத்தவர்கள் குழந்தைகளிலிருந்து முதியவர் வரை படுகொலை செய்யப்பட்டனர். இக் காலகட்டத்தின் ஓர் இரத்தத் துளியாக “பார்ஹா” திரைப்படம் திரையில் வருகிறது.

Continue reading “பார்ஹா (Farha)”

ஜெய் பீம்

திரை விலக்கும் திரை

சூர்யாவின் நடிப்பிலும் ஜோதிகா-சூர்யா இணைந்த தயாரிப்பிலும் ஞானவேலின் திரைக்கதை இயக்கத்திலும் வெளியாகியிருக்கும் படம் ஜெய் பீம். எல்லோருமே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை திரையிலும், அதன்பின்னரான அவர்களது பேட்டிகளிலும் காணக் கிடைக்கிறது. அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகை மாற்றிப் போட்டு உண்மைக்கும், பேசப்படாதவற்றைப் பேசுதல் என்ற துணிபுக்கும் நெருக்கமாக பாதையமைத்திருக்கிற திரைப்படங்களில் ஜெய் பீம் க்கும் ஓர் இடமுண்டு. அதனால் திரைப்படம் குறித்து பேசப்பட வேண்டிய தேவை அதிகமாகிறது. மிக அதிகளவிலான நேரம்ச விமர்சனங்கள் வந்தபடி இருக்கின்றன. அதற்கு தகுதியான படம் அது. கொண்டாடப்பட வேண்டியது.

Continue reading “ஜெய் பீம்”

சிற்பி

  • குறும்படம்

(முதலில் படத்தைப் பாருங்கள். பிறகு வாசியுங்கள்)

நோர்வே தமிழ் பிக்கர்ஸ் (N.T Picture) உருவாக்கியிருக்கும் 11 நிமிட குறும்படம் சிற்பி. இது ஒரு abstract வகைமைக்குள் வருகிறதாலும், அநாவசிமற்றவைகள் காட்சிகளுக்குள் அலையாமல் செறிவாக செதுக்கப்பட்டிருப்பதாலும் இதை ஒரு “திரை ஓவியம்” என சொல்லுதல் பொருத்தமாகும்.

Continue reading “சிற்பி”

கக்கூஸ்

 

ஓர் ஆவணப்படம்.

 

kakkoos-2

சுவிஸ் சூரிச் இல் “வாசிப்பும் உரையாடலும்” என்ற தொடர் சந்திப்பு கடந்த இரு வருடகாலமாக நிகழ்த்தப்படுகிறது. நூல்களை (முக்கியமாக மொழிபெயர்ப்பு நூல்களை) வாசித்து பின் உரையாடுவது என முதிய இளைய சந்ததிகள் இணைந்து பயணிக்கிற பாதை இது. இதன் இணைப்பாக “திரையிடலும் உரையாடலும்” இதுவரை இரண்டு முறை நடந்திருக்கிறது. 07.05.2017 அன்று நடந்த இரண்டாவது திரையிடல் உரையாடலில் கக்கூஸ் ஆவணப் படமும் இடம்பெற்றது. அந் நிகழ்வில் வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.

Continue reading “கக்கூஸ்”

தீபன்

 

dheepan-group

– திரையொழுக்கு.

தீபன் படம் பிரான்சின் அறியப்பட்ட இயக்குநரான ஜாக் ஓடியார் அவர்களால் இயக்கப்பட்ட பிரெஞ்சுப் படம். 2015 இன் கன்னஸ் விருதான பல்மடோர் விருதை வென்றிருக்கிறது. படத்தின் நாயகன் தீபன், நாயகி யாழினி, குழந்தை இளையாள் ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. சுமார் எண்பது வீதமும் தமிழிலேயே வசனங்கள் போகிறது. அதனால் தமிழ் ரசிகருக்கு அருகில் படம் வருவதை புரிந்துகொள்ள முடியும். இக் காரணங்களால் (ஒரு குறிப்பிட்ட வட்டத்துள்) தமிழர்களால் இப் படம் பற்றி பேசப்படுவதும் அதன் விருது பற்றி பெருமை கொள்வதும் நடந்தேறுகிறது. அது புரிந்துகொள்ளப்படக் கூடியது.

அப்படியிருந்தும்கூட தமிழக சினிமாக்களுக்கு அலையாகச் செல்லும் நிலைமைபோலன்றி, ஐரோப்பிய திரையரங்குகளில் பெரும்பாலான ஐரோப்பியர்களும் கொசுறளவான தமிழர்களும் இவ்வாறான படங்களை திரையரங்குகளில் பார்க்கும் நிலைதான் உள்ளது. பிரசன்ன விதானகேயின் “பிறகு“ (With You Without You) என்ற படத்தையும் 2014 இல் திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தமிழர்கள் பக்கத்து திரையரங்கில் ஓடிய “கத்தி“ திரைப்படத்துக்கு அலையாய் வந்திறங்கிக்கொண்டிருந்தனர். இதுதான் நமது சினிமா இரசனையின் இலட்சணம். திரையரங்கில் தீபன் படத்தை பார்த்துக்கொண்டிருந்த சுமார் 60 பேரில் நாம் 4 தமிழர்கள்தான் இருந்தோம்.

Continue reading “தீபன்”

Millions can walk. ஆவணப்படம்.

Gogo Basic சூரிச் இல் திரையரங்கொன்றில் இதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒன்றரை மணிநேர ஆவணப்படம்.

First they ignore you.

Then They laugh at you.

Then they fight you.

Then you win.

–  Mahatma Gandhi

millions can walk-1

Continue reading “Millions can walk. ஆவணப்படம்.”

சூரிச் இல் செங்கடல் ஓசை

 

ஈழத் தமிழ் மக்களின் போராட்டங்கள் நந்திக் கடலில் கரைக்கப்பட்டது. அலைகள் தம் கதைகளை தமிழகத்துக்கு மூச்சிரைத்தபடி எடுத்துவருகிறதோ என்னவோ, தமிழர் என்ற அடையாளத்தின்மீது மோதியழிகிறது. தமிழகமெங்கும் மாணவர் போராட்டங்கள் அலைமோதுகிற நாட்கள் இவை. வாழ்வுக்கான போராட்டம் என்பதற்கு இறப்பு இருக்காது, அது வௌ;வேறு வழியில் தொடர் வடிவங்களை எடுக்கும் என்பதன் சான்றாக இந்தப் போhராட்டங்கள் – அதன் சரிகள் தவறுகளுக்கு அப்பால்- சாட்சியாக இருக்கிறது. இன்னொரு கோடியில் „செங்கடல்“ திரைப்படம் தனுஷ்கோடியில் நின்று கடல் அலைகளுடன் பேசுகிறது.

Continue reading “சூரிச் இல் செங்கடல் ஓசை”