உணர்ச்சிவசப்படாதே என அறிவுரை கூறுவோர் மீது
வெறுப்பு வருகிறது,
உணர்ச்சி அறிவுக் கண்ணை மறைக்கும் என்பவர் மீதும்தான்!
உணர்ச்சிகளற்ற உடலும் மனமும் இறந்துபோவதற்குச் சமம்.
அறிவற்ற உடலுக்கு இந்த துரதிஸ்டம் வாய்ப்பதில்லை.
மகிழ்ச்சி கோபம் அழுகை சந்தோசம் என எல்லாமும் அறிவினுள் இருப்பதில்லை.
ஆதலால் நான் உணர்ச்சிவசப்படுவதை சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.
அதற்குள் ஓர் “மன்னிப்பு” என்ற வார்த்தை உறங்கியிருத்தல்கூடும்.
அது அறிவின் அளவுகோலால் ஆனது.
மனதின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் அந்த வார்த்தை ஒரு பிரசவத்தின் தொப்பூழ்க் கொடியோடு வாயிலிருந்து வெளிவருதலில் ஓர் உயிர் இருக்கும். அருகாமை இருக்கும்.
ஆதலால் அறிவையும் நான் சுகிக்க ஆவலாக இருக்கிறேன்.
அறிவையும் உணர்ச்சியையும் எதிரணியில் நிறுத்தும் உங்கள் வார்த்தைகளை நான் வெறுக்கிறேன்.