Archive for the ‘கவிதை’ Category
வெறுமை
Posted October 2, 2019
on:- In: கவிதை
- Leave a Comment
நிலாவொளியை இரகசியமாய் முத்தமிட்டு கிறங்கிப் போய்விடுகின்ற கடல் அலைகளின் கள்ள அசைவுபோல் அவளின் தோல் சுருக்கங்களுக்கு இடையே வாழ்ந்துபட்ட அனுபவம் துலங்கிக்கொண்டிருந்தது.தன்னைத் தாங்குவதில் மூன்றாவது காலாய்ஒரு கைத்தடியைத் தன்னும் அவள் மறுத்திருந்தாள். அனுபவத்தின் பாரம் அவளை மெல்ல நடந்துகொள்ள அனுமதித்தது.காணும்போதெல்லாம் ஒரு புன்னகையை அவள் சிந்தியபடிஎனை எதிர்கொள்வாள். எனது கைமணிக்கட்டை பிடித்து பேச தொடங்குவாள்.எனது அவசரம் மணிக்கட்டின் பிடியை கடிந்துகொள்வதால்செல்லுபடியாகிற ஒரு காரணத்தோடு ஒவ்வொரு முறையும் அவளை கடந்து செல்வேன்.என்றாவது ஒருநாள் அவளுடன் ஆறஅமர இருந்து பேச வேண்டும்.அவள் காட்டுகிற இன்னொரு உலகத்தை தரிசித்துவிட வேண்டும் என்ற கனவு எனது அறிவின்மையால் கலைந்து போனது.அவள் தனியாக வாழ்ந்து கழித்த அறைவெறுமையாய்க் கிடந்தது.
கிவிதை
Posted April 28, 2018
on:- In: கவிதை
- Leave a Comment
சுடர்கதை
Posted October 24, 2016
on:
இதுவுமோர் உலகு !
Posted December 1, 2015
on:உயிரைக் கொல்லும் அதிகாரம் யாருக்கும் கிடையாது என
குரலெழுகிற இதே உலகில்தான்
“மன்னித்துவிடு” என்று வேறு கேட்க வேண்டியுமிருக்கிறது.
அவலம்தானெனினும் கேட்டுக்கொள்வோம்
அதிகாரம் படைத்த சீமான்கள்
நவீன உலகில் வீற்றிருந்தபடி
ஆதியுலகத் தண்டனைகளை ஏவுகின்றனர்
அடிமைப்பட்டவர்கள்மேல்.
தாழ்திறவாய்.
Posted May 12, 2015
on:- In: கவிதை
- Leave a Comment
அவள் அனாதையாகிவிட்டிருந்தபோது கவனித்தாள், தன்மீது
ஓர் இருள் துண்டொன்று போர்த்தப்பட்டிருப்பதை.
தாழப் பறந்த கிபீர் விமானங்கள்
கிழித்துவிட்டிருந்த துண்டாக இது இருக்கலாம்.
நிலமதிர வெடித்துச் சிதறிய குண்டின் செல்கள்
அரிந்தெறிந்த துண்டாகவும் இருக்கலாம்.
எது எப்படியாகிலும் அவள் அதைப் போர்த்தியிருந்தாள்
அல்லது
அது அவளைப் போர்த்தியிருந்தது.
எனது வார்த்தைகளுள் நான்
Posted May 10, 2015
on:- In: கவிதை
- Leave a Comment
நண்ப,
யன்னல்கள் திறந்திருந்த காலமதில்
பரிமாறிய வார்த்தைகள் இன்னமும்
தொலைந்துபோய்விடவில்லை என நம்புகிறேன்.
முரண்கள் மோதி மோதி வளர்ந்த எம் உறவு – இன்று
முகநூல் நட்பாய்
“லைக்” குறியீடாய்
தேய்ந்து போகிறதா என அச்சப்படுகிறேன்.
எனது வார்த்தைகள் உண்மையானவை – அதில்
எப்போதும் ஈரமும் இருக்கும்.
பிம்பங்கள் வரையும் தூரிகைகளின் படையெடுப்பு
விமர்சனங்களை தாக்கியழிக்கிற காலமிது.
மௌனத்தை அதிகம் நேசிக்கக் கற்றுக் கொள்கிறேன்.
அது ஓர் நெடுவீதியாய் நீண்டு
என்னையும் உன்னையும் தன்
முனைகளால் விலக்குப்பிடிக்கிறது அல்லது
தள்ளிக்கொண்டிருக்கிறது.
என்னிடம் தூய்மைகள் எதுவும் இல்லை.
அழுக்கை நான் வெறுத்தபடியேதான் நகர்கிறேன்.
நெடுவீதி எமை தூரப்படுத்தும் இடைவெளியை
தனிமை நிரப்பிக்கொண்டிருக்கிறது.
தனிமையை நான் நேசித்தபடி இருப்பேன் – அதில்
தொங்கிக்கொண்டிருக்கிறது எனது ஆன்மாவின் வாழ்வு.
10052015
உயிரிசை
Posted November 8, 2013
on:- In: கவிதை
- Leave a Comment
ஒவ்வொரு கணங்களையும் ஒரு யுக நீட்சியாய்
சப்பித் துப்பும் ஓர் பிசாசு வெளியில்
நீ நிறுத்தப்பட்டாய், இசைப்பிரியா.
செங்கோலர்களின் எல்லா அங்கீகாரங்களையும் சூடி
கொலைவெறி கொண்டலைந்த
பேய்களின் பாழடைந்த போர்மண்டபத்துள்
அகப்பட்டாய் நீ.
2013
Posted December 31, 2012
on:- In: கவிதை
- Leave a Comment
இலையுதிர்கால ஓவியர்கள் தீட்டிச்சென்ற
ஓவியங்கள் உருவழிந்துபோன
வரலாற்றை பனிக்கால தேவதைகள்
நிலமெங்கும் மலையெங்கும்
ஏன் மரமெங்கும்கூட அவசரமாய்ச்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் திரும்பிப் போய்விடவேண்டும்.
நதியிடம் சொல்லி
அல்லது சொல்ல முயற்சித்து
மறைந்துபோகின்றனர் அவர்கள்.
நினைவேந்தல்
Posted October 27, 2012
on:- In: கவிதை
- Leave a Comment
சாமப் பொழுதில்
அல்லது ஓர் அந்திமப் பொழுதில்
இல்லாவிடினும்
ஓர் கருக்கல் பொழுதில்
மறைந்திருத்தல்; இலகு என்றபோதும்
நிலம்வெளித்த ஓர் காலைப் பொழுதில்
யார் கண்டார்
மரணம் ஒளித்திருத்தல் கூடுமென.
இன்னமும் உறங்கியிருக்கவில்லை
Posted May 12, 2012
on:- In: கவிதை
- Leave a Comment
இருள்படர்ந்த கடற்பரப்பை நீவிவரும் காற்று
எனது குடிசையின்மீது இடறுகிறது.
இடையிடையே அது கிடுகை கூரையிலிருந்து
பெயர்த்துவிடுவது போலவும், பின்னர்
கிடுகு அமைதியடைவதாயும் இருந்த கணங்கள்
என்னை கடத்திவைத்திருந்தன.