Archive for the ‘கட்டுரை’ Category
- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
[24-May-2009]
இலங்கை அரசின் ஜனாதிபதி கறுப்பு மயிருடனும் கறுப்பு மீசையுடனும் கம்பீரமாய் வருகிறார். ஏதோ ஒரு செய்தியை அறிவிக்கும் அவசரத்தில் விமானத்திலிருந்து இறங்கிவருகிறார். இதுவரை மண்ணைப் பிரிந்து அகதியாக இருந்ததுபோன்ற, அல்லது விடுவிக்கப்பட்ட ஒரு மண்ணில் முதன்முதல் காலடி வைப்பதுபோன்ற ஒரு பாவனையில் மண்ணை தொட்டு வணங்குகிறார். அவர் பரபரப்பாக இருந்தார். விமான ஓடுபாதையில் அமைச்சர் பட்டாளம் குதூகலமாய் வரவேற்றுக் கொண்டிருந்தது…
- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
[30-Mar-2009]
“யாழ்ப்பாணத்திலை உங்கடை சனத்துக்கு நான் ஒரு பாடம் படிப்பிக்கிறன். நான் வித்தியாசமானவன். நான் சந்திரிகா போலை இல்லை…” இது வீதிச்சண்டியன் ஒருவனின் வாக்குமூலமல்ல. சபிக்கப்பட்ட ஒரு நாட்டின் ஜனாதிபதியின் குரல். “நான்தான் உன்ரை செக்குரிற்றியை வாபஸ் பெற்றனான். உன்ரை இடத்துக்கு உனக்குப் பாதுகாப்புத்தர ஒருத்தரும் வரமாட்டாங்கள். போய் பிரபாகரனிட்டை கேள் உனது பாதுகாப்பை. காட்டுச் சட்டங்களைப் புகழ்ந்துகொண்டிருக்கிறவையள் உங்கடை ஆக்கள்…” நாட்டுச் சட்டங்களை கையில்வைத்திருக்கும் ஒரு ஜனாதிபதியின் உரையாடல் இது.
அரசிடம் தஞ்சம் கோரும் தமிழரசியல்
Posted March 16, 2009
on:- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
[16-Mar-2009]
இலங்கையின் அரசியல் இன்னொரு சுற்றில் வந்திருக்கிறது. ஆயுதத்தைத் தூக்கிய கைகள் கும்பிடு போட்டு பெருந்தேசியக் கட்சியில் காட்சியளிப்பதுதான் அது. இனவாதம் என்பது பெருந்தேசிய இனத்தால் சிறுபான்மை மக்களின்மேல் பிரயோகிக்கப்படுவது மட்டுமல்ல.சிறுபான்மை இனத்தை ஏற்றுக்கொள்ள வைப்பதிலும்தான் அது முழுமையடைகிறது. வீரியமாகச் செயற்படுகிறது. டக்ளஸ் தொடக்கம் கருணா வரையிலான இயக்கத் தலைமைகள் இன்றைய பெருந்தேசிய இனக் கட்சிகளில் காட்சிதருவதை நாம் இந்தத் தளத்தில் வைத்துப் பார்க்கமுடியும். இதை இன்னொருவகையில் சொல்வதானால் பேரினவாதம் புதிய பரிமாணத்தை எட்டுகிறது என்பதே அது.
- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
குண்டுச்சட்டி அரசியலும்
புலிகளின் இறுதிக் குறுகிடமாய்ப்போயுள்ள முல்லைத்தீவை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக இலங்கை இராணுவம் அறிவித்து பல வாரங்களாகிவிட்டது. இடமிடமாய்ப் பெயர்ந்த மக்களும் இடம்பெயர்ந்த மக்களும் இந்த வன்னிப் போர்ப் பொறியினுள் அகப்பட்டுப்போயுள்ளனர். விரும்பியோ விரும்பாமலோ புலிகளின் பாதுகாப்பு அரணாக பலியாகிப்போயிருக்கிறார்கள் அவர்கள். அவர்களின் வெளியேற்றத்தை புலிகள் தடுத்துவைத்துள்ளதாக எல்லாத் தரப்பிலிருந்தும் கண்டனங்களும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன.
- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
1985 நடுப்பகுதி. இராணுவம் கவசவாகனங்களுடன் அதிகாலை 4 மணிக்கே ஊரைச் சற்றிவளைத்திருந்தது. ஒலிபெருக்கி அறிவிப்பின் பின்னர் பொது இடத்துக்குப் போக வேண்டும். இளைஞர்கள் யுவதிகள் பிரித்து நிறுத்தப்படுவார்கள். முழந்தாளில் வெயிலுக்குள் மணிக்கணக்கில் நிற்கவேண்டும். சந்தேகத்துக்கு உரியவர்கள் கைதுசெய்யப்படுவார்கள். மற்றவர்களுக்கு அடிஉதை… பெரிசாக இப்போதையளவுக்கு போர் என்று ஒன்று இருக்கவில்லை. இயக்கங்கள் பல இருந்தன.
- In: கட்டுரை | பதிவு
- Leave a Comment
இந்த நாட்டில் நான் மதிக்கப்படுகிறேனில்லை, ஏனெனில் நான் ஒரு கறுப்பன். பதவி உயர்வில் அலட்சியப்படுத்தப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். ஒரு கிரிமினலாக கவனிக்கப்படுகிறேன், ஏனெனில் நான் ஒரு கறுப்பன். உங்களில் பல ஆயிரம்பேர் அவருக்கு வாக்களிக்க விருப்பமில்லை, ஏனெனில் அவர் ஒரு கறுப்பன், ஆனால் அது உங்களுக்கு ஒரு பிரச்சினையாகத் தெரிவதில்லை. எனக்கு மட்டும் அது தெரியவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்…