Archive for the ‘கட்டுரை’ Category
சுவிஸ் – வரலாற்றின் பொத்தல்கள்.
Posted August 23, 2019
on:There is no short-cut to the revision of a country’s history – Hans Fässler
“சுவிற்சர்லாந்து காலனியாதிக்கத்தில் பங்கேற்காத நாடு அடிமைகளை கொள்ளாத நாடு” என்று சொல்லப்படுகிறது. அது நேரடியாக கொலனிகளை வைத்திருக்காததால் அப்படி ஒரு தோற்றப்பாடு உள்ளது. இதற்கு மாறாக திரைமறைவில் இருந்த விவகாரம் அல்லது உண்மை சுவிசில் படிப்படியாக பேசப்படுகிற பொருளாக மாறியுள்ளது.
மணல் யுத்தம் (Sand war)
Posted July 28, 2019
on:- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
இந்த பத்தியை கணனியில் நான் எழுதிக்கொள்ள பாவிக்கும் ‘எழுத்தடங்கி’ (keyboard) மட்டுமல்ல, கணனித் திரை… ஏன் கணனியின் உடலழகுகூட மணல் இன்றி உருவாகியிருக்க சாத்தியமில்லை. பாவிக்கும் கைபேசிகள், தொலைக்காட்சிகள், அதன் சிம் கார்ட்டுகள், சிப்ஸ்கள் மட்டுமல்ல, பற்பசை மற்றும் அழகுசாதனங்கள்கூட மணலின்றி சாத்தியமில்லை. அந்தளவுக்கு வாழ்வோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது மணல்.
இருந்தும் நம்மில் பலராலும் கண்டுகொள்ளப்படாமல் நடக்கும் யுத்தம் மணல் யுத்தம் (sand war).
நிகழ்வுகளின் கொடுநிழல்
Posted April 22, 2019
on:- In: கட்டுரை | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
நேற்றைய தினம் (21.04.2019) இலங்கை வரலாற்றில் பயங்கரவாதம் இன்னொரு பரிமாணத்தை நிறுவியிருக்கிற அச்சம்தரும் நாளாகியது. பெரும்பாலும் உதிரிப் பயங்கரவாத தாக்குதல்கள் அல்ல இவை என்பதை தாக்குதலின் எண்ணிக்கைகளும் அதன் தன்மைகளும் நேரத் திட்டமிடல்களும் நாட்தேர்வும் குண்டுகளின் வலுவான சேதம் தருகிற தன்மைகளும் தற்கொலைத் தாக்குதலும் உணர்த்துகின்றன. எனவே இது இலங்கைக்குள்ளால் திடீரென கிளம்பிய பூதமல்ல. இதற்கு ஒரு அந்நியப் பின்னணி இருக்க சாத்தியம் இருக்கிறது.
பிம்பங்களைச் சிதைப்போம்
Posted May 10, 2018
on:- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
// ஈழ விடுதலைப் போராட்டத் தலைவர்கள் எல்லோருமே பிம்பக் கட்டமைப்புகள்தான். அவர்கள் சமூகம் குறித்து, விடுதலை குறித்து, பொருளாதாரம் குறித்து, சுற்றுச்சூழல் குறித்து, சமூகவிடுதலை குறித்து, தத்துவம் குறித்து, வரலாறு குறித்து தீவிரமாகவும் ஆய்வுத்தன்மையுடனும் பேசிய, எழுதிய, பேட்டியளித்த கருத்துகளை கண்டடைய முடிவதேயில்லை.// – 06.05.18, FB
இந்த முகநூல் குறிப்பு இயக்கத்தை அகநிலையில் வைத்துப் பார்த்து எழுதப்பட்ட ஒன்று. இதற்கு வந்திருந்த பக்குவமான பின்னூட்டங்கள் ஒரு விரிவான பதிவை செய்ய வைத்திருக்கிறது.
பிரம்பியம்
Posted November 9, 2017
on:சாதியப் போராட்டம்
Posted March 30, 2017
on:- In: கட்டுரை | பதிவு
- Leave a Comment
– வெகுஜன அமைப்புகளும் முன்னுதாரணமும்.
(12.03.17 அன்று சுவிஸ் “வாசிப்பும் உரையாடலும்” நிகழ்ச்சியில் நான் வைத்த கருத்துகளை தழுவி எழுதப்பட்டது.)
வெகுஜன அமைப்புகள் ஒரு சமூகத்தின் அசைவியக்கத்திலிருந்து தோன்றுகிறது. தனக்கான சுயத்தை உடையதாகவும் சுதந்திரமான இயக்கத்தை வேண்டிநிற்பதாகவும் குறித்த எல்லைகளுக்குள் தமது இலக்கை நிர்ணயிப்பதாகவும் இருக்கும். அது தொடர்ந்து செயற்படுவதோ, கலைந்போவதோ அதன் இலக்கைப் பொறுத்தது.
இலங்கையில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் நமது தேசிய விடுதலைப் போராட்டத்தை விடவும் ஒரு முன்னுதாரணமான போராட்ட வடிவமாகும். மக்கள் போராட்டங்களில் வெகுஜன அமைப்புகளின் பாத்திரத்தை முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டுமெனில் அது இந்த சாதியத்துக்கு எதிரான போராட்டத்திலிருந்துதான் முடியும்.
கிறிஸ்துவுக்குமுன் 4000 வருட பழமை வாய்ந்ததாக நவீன வரலாற்றாசிரியர்களால் சொல்லப்படுகிற “குத்துச்சண்டை”யின் வேர் வட ஆபிரிக்காவில் தோற்றம் பெற்றது என்கின்றனர்.. இது கிரேக்கம் மற்றும் றோம் போன்ற இடங்களிலும் விளையாடப்பட்டது. அது Pugilism என அழைக்கப்பட்டது.
ஆவணப்படுத்தப்பட்ட முதல் குத்துச்சண்டை போட்டி 1681 இல் பிரித்தானியாவில் நடாத்தப்பட்டது. “குத்துச்சண்டையின் தந்தை” என அழைக்கப்படும் Jack Baugton 1743 இல் முதன்முதலில் குத்துச்சண்டையை ஒரு விளையாட்டு (sport) என்ற வடிவத்துள் கொண்டுவருவதற்கான சில விதிகளை அறிமுகப்படுத்தினார். 1865 இல் பாரிய மாற்றங்கள் கொண்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்றைய விதிகளின் தொடக்கப்புள்ளி அதுவாகவே இருந்தது. 1904 இல் முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையும் உள்ளடக்கப்பட்டது.
- In: கட்டுரை | பதிவு
- Leave a Comment
சிறைக் கொடுமையிலிருந்து வெளிவருதில் தமது தனிப்பட்ட வாழ்வை அல்லது தமது இருப்புகளை முதன்மைப்படுத்தி செயற்படும் மனித வாழ்வியல் விருப்பை மண்டேலா எடுத்துக்கொண்டவரல்ல. போராளியாகவே உள்ளே போனார். போராளியாகவே வெளியே வந்தார், அதுவும் நிபந்தனைகள் எதுவுமற்று. போராட்ட வாழ்வில் தம்மை நம்பி வந்த மக்கள் இழந்தவைகளுக்கு அவர் இவ்வாறுதான் பொறுப்பெடுத்தார். பதிலளித்தார். அவர் உண்மைப் போராளியாய் நிமிர்ந்தது இவ்வாறுதான்.
புகலிட இலக்கியச் சந்திப்பின் தடம்
Posted May 10, 2013
on:- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
இலக்கியச் சந்திப்பு சம்பந்தமான உரையாடல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. 40வது இலக்கியச் சந்திப்பு இலண்டனில் நடந்து சர்ச்சைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. இந்த சர்ச்சையை உடனடிக்; காரணங்களால் வியாக்கியானப்படுத்துவது முழுமையடையாது. அதன் வரலாற்றுப் பின்னணியை நாம் பார்த்தாகவேண்டியுள்ளது. இதனடிப்படையில் எனது பார்வையில் இதை ஒரு பதிவாக எழுதலாமென எடுத்த முயற்சிதான் இது.
- In: கட்டுரை | விமர்சனம்
- Leave a Comment
[24-Aug-2009]
வவுனியா தடுப்பு முகாமில் தேக்கிவிடப்பட்டவர்களை மேலும் மேலும் அவலங்கள் தாக்குகின்றன. புலியரிப்புப் பன்னாடைக்குள் அவர்கள் கிளையப்பட்டுக்கொண்டிருப்பது தொடர்கிறது. இன்னமும் புலிகள் மக்களோடு மக்களாக அங்கு இருக்கிறார்கள் என்பதால் அவையெல்லாம் அரித்து முடிந்தபின் மக்களை வெளியே கொட்டி அள்ளிச்சென்று குடியிருத்தப்போகிறதாம் அரசு. இளைஞர் யுவதிகளை சந்தேகத்தின் பேரிலோ அல்லது எந்தக் கோதாரியின் பேரிலோ அள்ளிச் சென்று விசாரிப்பது தொடர்கிறது.