ஒரு கலைஞனும் நாங்களும்

பண்பாட்டுச் சுவைப்பதக் கூறுகளின் பகிர்வு

DSCF0715
தமிழ் திரைப்பட நடிகர், நாடக இயக்குனர் மற்றும் மதுரை நிகழ் நாடக மைய இயக்குனர் என்ற பன்முக ஆளுமை கொண்ட சண்முகராஜா அவர்களின் சுவிஸ் வருகையின் ஒரு அங்கமாக Kulturzentrum, Thalwil அமைப்பும் சுவிஸ்- இந்திய கலாச்சாரத் திட்டம் (SICP)அமைப்பும் ஒரு கலாச்சாரச் சந்திப்பை ஒருங்கிணைத்திருந்தது.

Continue reading “ஒரு கலைஞனும் நாங்களும்”

சோஃபியின் உலகம்

  • நூல் மீதான வாசிப்பு

01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.

sophies world

சோபியின் உலகம்.

நோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்கிறது.

Continue reading “சோஃபியின் உலகம்”

பிரதியில் மரபும் நவீனத்துவமும்

ஏ.ஜி.யோகராஜா அவர்களின் “புலம்பெயர் நாடக எழுத்துருக்கள்“ நூல் வெளியீட்டு விழா சுவிஸ் இல் 20.12.2014 அன்று நடைபெற்றது. அதில் மேலுள்ள தலைப்பில் நான் ஆற்றிய உரை இது – ரவி

yoga-nool pic

எல்லோருக்கும் வணக்கம்.
புலம்பெயர் நாடக எழுத்துருக்கள் என்ற இந் நூலின் அறிமுக ஒன்றுகூடலில் நாம் இருக்கிறோம்;. நாடக எழுத்துரு பற்றிய, அதாவது பிரதி பற்றியதுதான் எனக்குத் தரப்பட்டுள்ள தலைப்பு. “நாடகப் பிரதியில் மரபும் நவீனத்துவமும்“ என்று தரப்பட்டிருக்கிறது.

கலை இலக்கிய வரலாற்றில் கிளாசிசம் முதல் இருத்தலியம் வரையிலான பல கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் உருவாகியிருக்கின்றன. மாற்றம் என்பதே மாறாதது என்பார்கள். இந்தக் கோட்பாடுகளின் உருவாக்கமும் அவ்வாறே நிகழ்ந்து வந்திருக்கிறது. இந்த மேற்குலகக் கோட்பாடுகள் கீழைத்தேயத்துக்கு நகர்ந்து வருகிறபோது அதை எமது சூழலுக்கு எப்படி எதிர்கொள்வது என்பது சவால்களாக ஆகிவிடுவது இயல்பு.

Continue reading “பிரதியில் மரபும் நவீனத்துவமும்”

சுனந்த தேசப்பிரிய ஆற்றிய உரை…

சூரிச் இல் [18-Oct-2009]

கடந்த 11.10.2009 ஞாயிற்றுக் கிழமையன்று சூரிச் இல் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது. காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணிவரை நடந்த இந்தக் கலந்துரையாடலில் சுமார் 60 க்கு மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இக் கலந்துரையாடலுக்கான முக்கிய புள்ளியாக,

“இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின்  எதிர்காலமும்” 

என்ற தலைப்பில் சுனந்த தேசப் பிரிய அவர்கள் உரையாற்றினார்.

Continue reading “சுனந்த தேசப்பிரிய ஆற்றிய உரை…”