Archive for the ‘அறிமுகம்’ Category
- In: அறிமுகம் | இதழியல் | முகநூல் குறிப்பு | விமர்சனம்
- Leave a Comment
பரதன் நவரத்தினம் – பாரதி சிவராஜா – மீராபாரதி – புதியவன் – தேவன் – மாலினி – புதியமாதவி – அரியநாச்சி – டேவிட் கிருஸ்ணன் – அம்பை – சண் நரேந்திரன் – கௌதம சித்தார்த்தன் – சந்திரா நல்லையா – தேவா – கருணாகரன் – அசுரா நாதன் – சிவச்சந்திரன் சிவஞானம் – பா.செயப்பிரகாசம் – யசோதா பத்மநாதன் – வாசன் – சுரேகா – தோழர் – இராகவன் (இலங்கை) – க.பத்திநாதன் – குமணன் – நிலாந்தி – ஜெகநாதன் சற்குரு – எஸ்.கே.விக்னேஸ்வரன் – அகரன் பூமிநேசன் – பரமநாதன் தவநாதன்– முகுந்தன் குணரட்ணம் – சுசீந்திரன் நடராஜா – கருணாகரமூர்த்தி – எம்.கே.முருகானந்தன் – சரவணன் மாணிக்கவாசகம் – பற்றிக் – டி.சே.தமிழன் – தேவ அபிரா – அன்பாதவன்– லலிதாகோபன் – எம். ரிஷான் ஷெரீப்
Read the rest of this entry »- In: அறிமுகம் | இதழியல் | விமர்சனம்
- Leave a Comment
பச்சைக் குதிரை
Posted January 17, 2021
on:- In: அறிமுகம் | இதழியல் | பதிவு
- Leave a Comment
எனது வாசிப்பு
பச்சைக் குதிரை ஒரு விளையாட்டு. அது இங்கே படிமமாக நாவலில் விரிகிறது. குனிஞ்சு நிக்கணும். ஒவ்வொருவரா தாண்டணும். குனிஞ்சு நிக்கிறவங்க மெல்ல உயரத்தைக் கூட்டினாலும் அவங்களைத் தாண்டிற வெறியோடு அவங்க முதுகை அமத்தி பாய்ந்து கடக்க வேண்டும்.
Read the rest of this entry »- In: அறிமுகம் | இதழியல் | பதிவு
- Leave a Comment
புகைப்படங்களும் காணொளியும்
- அறிமுகம்
நேரில் :
மாலினி மாலா (யேர்மனி)
ராஜன் (சுவிஸ்)
இணையவழி :
புதியமாதவி (மும்பை)
சண்முகராஜா (தமிழகம்) - வாசகர் பகிர்வு

இச்சா
Posted December 1, 2019
on:- In: அறிமுகம் | இதழியல் | விமர்சனம்
- Leave a Comment
நாவலின் முடிவும் தொடக்கமும் ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு ஆலாவின் வாழ்வை வட்டமாக, நாவலின் வடிவமாக வரைகிறது. இந்த வட்டத்துள் ஆலாவின் வாழ்வு சிக்கிச் சுழல்கிறது. நூலாசிரியரின் மொழியாளுமையும் படிமங்களும் வாசகரை இந்த வட்டச் சுழியுள் உள்ளிழுத்துவிடுகிறது. இந்தப் போரானது எப்படி ஒரு விளம்புநிலை மனிதரை வந்தடைகிறது என்பதையும், அது அந்த மனிதர் சார்ந்து மற்றவர்களையும் உள்ளிழுத்து துன்பப்படுத்துகிறது என்பதையும் நாவல் பேசுகிறது.
நினைவழியா வடுக்கள்
Posted October 20, 2019
on:சிவா சின்னப்பொடி அவர்களின் நூல்
சமூக ஒடுக்குமுறைகளான சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை, நிறவெறி என்பன குறித்தான குரல்களுக்கு ஓய்வு இல்லாமலிருப்பதானது அவற்றின் ஒடுக்குமுறையை பிரதிபலித்துக் காட்டுவதான ஒன்று. எனவே இவைகளைப் பற்றி பேசுவதை எதிர்ப்பது அல்லது இதை பேசுவதால்தான் அவை வாழ்கிறது என வைக்கப்படுகிற பொதுப்புத்தி கதையாடல்கள் அர்த்தமற்றது. அனுபவத்தை தமிழில் பட்டறிவு என்ற சொல்லால் சுட்டுவர். எமது அறிவுத்தளம் விரிவடைய வேண்டுமானால் அனுபவங்களை கேட்பதும் கிரகிப்பதும், அதை தர்க்க விஞ்ஞானத்துக்கும் கோட்பாட்டு ஆய்வுக்கும் உட்படுத்தி புரிந்துகொள்வதும் பயனுடையது.
வெண்ணிறக் கோட்டை
Posted September 8, 2019
on:- In: அறிமுகம் | இதழியல்
- Leave a Comment
– ஓர் அலைக்கழிப்பு
(ஓரான் பாமுக்கின் “வெண்ணிறக் கோட்டை” என்ற நாவல் வாசிப்பும் உரையாடலும்-23 இல் 01.09.19 அன்று உரையாடலுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இந் நாவல் குறித்து பல்வேறு பரிமாணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அதில் நான் முன்வைத்த கருத்துகளின் விரிவு இப் பதிவு)
ஓரான் பாமுக் இன் ஆரம்பகால நாவல்களில் ஒன்று வெண்ணிறக் கோட்டை. ஓட்டோநாம் துருக்கிய சாம்ராஜ்யம் 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலவிய பெரும் சாம்ராஜ்யம் 15ம் நூற்றாண்டிலும் பின்னர் 16ம் நூற்றாண்டிலும் அது வெனீஸ் மீது போர் புரிந்தது. இந்த இரண்டாவது காலகட்டத்தில் தொடங்கி, போலந்தின் வெண்ணிறக் கோட்டையை கைப்பற்ற நடந்த போர்வரையான காலப் பகுதியுள் வைத்து புனையப்பட்ட நாவல் இது.
கெய்சா (Geisha)
Posted February 3, 2019
on:- In: அறிமுகம் | இதழியல் | விமர்சனம்
- Leave a Comment
அறிமுகமும் அப்பாலும்
கெய்சாக்களின் தோற்றம்
யப்பானின் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரத்தின் ஓர் அங்கமாகத் தோன்றியவர்கள்தான் கெய்சா. இசை நாட்டியம் நடனம் காதல் காமம் என எல்லாமுமான கலைவடிவம் அவள். சிறுபான்மையாக ஆண் கெய்சாக்களும் இருந்தனர். அவர்களும் பெண் உடையிலேயே தோற்றமளித்தனர். பெண்கள் மிக உயரமான வெள்ளை மரக் காலணியையும் கிமோனோ என்ற பாரமான உடையையும் அணிந்திருப்பார்கள். கெய்சா ஆண்கள் வெள்ளை காலுறைகளைகளையும் கிமோனோவையும் அணிந்துகொள்வர். முகம் முற்றாக வெள்ளைப் பூச்சால் நிறைந்திருக்கும். கண் இமைகள் புருவங்கள் இதழ்கள் எல்லாவற்றையும் வெள்ளை, சிவப்பு, கறுப்பு என பூச்சுகள் மேய்ந்திருக்கும். தலை முடிகள் கொண்டையாக வாரிக் கட்டப்பட்டு குச்சிகள் சொருகப்பட்டு, தொங்கும் அலங்காரங்கள் கொண்டவளாய் காட்சியளிப்பாள். மொத்தத்தில் அவள் ஒரு அழகுப் பொம்மைபோல இருப்பாள். சாமிசென் இசைக்கருவி உட்பட மேள இசையையும் வாசிப்பதில் கடுமையான பயிற்சி பெற்ற விற்பன்னர்களாக இருந்தனர். அரங்கியலிலும்கூட அவர்கள் தம்மை கலைஞர்களாக நிரூபித்துக்கொண்டவர்கள். நறுமணங்களை ஊகித்தறியும் ஆற்றலிலும் கவிதை எழுதுவதிலும் பாடுவதிலும் என அவர்கள் ஒரு கலைப் பொக்கிசமாக இருந்தனர்.
சோஃபியின் உலகம்
Posted July 29, 2018
on:- In: அறிமுகம் | இதழியல் | உரை | பதிவு | விமர்சனம் | Uncategorized
- Leave a Comment
- நூல் மீதான வாசிப்பு
01.07.18 அன்று வாசிப்பும் உரையாடலும் (சுவிஸ்) -நிகழ்வு 17 இல் முன்வைக்கப்பட்ட எனது கருத்துகள் இவை.
சோபியின் உலகம்.
நோர்வேயைச் சேர்ந்த யூஸ்டேய்ன் கோர்டர் எழுதிய நூல் இது. இவர் தத்துவம் கற்பிக்கும் ஆசிரியர். இந் நாவல் ஐரோப்பிய தத்துவத்தின் தோற்றத்தையும் தடங்களையும் அதன் வளர்ச்சியையும் அதன்வழியான தத்துவவாதிகளையும் அறிமுகப்படுத்துகிற பணியை 14 வயது சிறுமியொருத்திக்கு புரியவைக்கிற எல்லைக்குள் சொல்ல முயற்சிக்கிறது.
வாசிப்பும் உரையாடலும் -17
Posted July 14, 2018
on:- In: அறிமுகம் | இதழியல் | பதிவு | முகநூல் குறிப்பு
- Leave a Comment
01.07.2018 (சுவிஸ்)
// பிரெஞ்சு இத்தாலி யேர்மன் என பல மொழிகளுக்கூடாகவும் அடுத்த தலைமுறைக்கு தன்னை வாசிக்க ஒப்புக்கொடுத்த “சோபியின் உலகம்” இப்போ தமிழில் ஓர் உரையாடலை செய்யவைத்தது. மரவீட்டு முன்றலில் இருக்கிறோம். அந்த வெளிக்கு சுவர்கள் இருக்கவில்லை. கதவுகள் இருக்கவில்லை. ஜன்னல்களும் இருக்கவில்லை.//