காற்றில் அசைந்தாடுகிறது காண்
அந்த நாணல் புல்.
இயல்பாய்
அதன் நளினம் காண்
ரசனை வெளி நிரப்ப.
குழந்தையொன்று
அள்ளிவரும் இயல்பெல்லாம்
நாளும் பொழுதுமாய் தேய்கிறது காண்
என் பயிற்சிக் களத்தில்.
ஓ என் குழந்தையே
நீ இப்படி நட
இப்படிப் பேசு
இப்படி சாப்பிடு
இப்படி உடை அணி
—
வந்து இதற்குள் இருந்துவிடு.
சமூகம் ஒதுக்கித் தந்த வெளிக்குள்
குழந்தையை தேய்த்துத் தேய்த்து
பக்குவமாய்
திணித்துக் கொள்கிறேன் காண்
தந்தைப் பணி தீர்க்க.
கற்களையும் தடிகளையும்
முட்களையும்கூட
குழந்தை
சேர்த்துவந்து விளையாடுகிறது காண்
தன் ரசனைவெளி எறிந்து.
~சீ! இதென்ன வீட்டிற்குள் கஞ்சல் குப்பை
ஆஹா! பார் இந்தப் ப+வை
அதன் அழகை!|
தேய்த்துத் தேய்த்து சரிக்கட்டிவிடுகிறேன் காண்
குழந்தையின் ரசனையை.
அதுவே இயல்பானதாய்
இயற்கையானதாய்
பிறப்போடு வந்ததுவாய்
…
ஓ என் பெண் குழந்தையே
இன்னுமொன்று.
எமது ரசனை மோந்து
இயற்கை மாறுவதில்லை.
ஆனால்
மற்றவர் ரசனைக்கு
நீ
மாறவேண்டும் காண்
மாறிவிடு!
அன்றேல்
நீ அழகே இல்லாதவள்!
– ரவி (May 2000)